உ.பி.யில் பேருந்து கவிழ்ந்து விபத்து: 25 பேர் காயம்!
பேருந்து கவிழ்ந்து விபத்து பற்றி..
உத்தரப் பிரதேசத்தின் பிலிபிட்டில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 25 பேர் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
பரேலி மாவட்டத்தில் உள்ள நவாப்கஞ்ச் மற்றும் அருகிலுள்ள கிராமங்களிலிருந்து பிகாரில் உள்ள ஒரு சூளைக்கு சுமார் 60 தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற பேருந்து பல்ராம்பூர் சௌக்கில் சாலையில் கவிழ்ந்தது.
இந்த விபத்தில் 25 பேர் காயமடைந்தனர். மேலும் ருக்சானா மற்றும் ஜன்னதி பேகம் ஆகிய இரு பெண்கள் படுகாயமடைந்த நிலையில் அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
Advertisement
Advertisement
மீதமுள்ளவர்கள் பூரான்பூரில் உள்ள சமூக நல மையம் மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
விபத்து தொடர்பாக போலீஸார் அப்பகுதியில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.