கோப்புப் படம் 
இந்தியா

வீட்டுக்குள் இறைச்சி வேண்டாம்! தம்பியைக் கொன்ற சகோதரர்கள்!

மதுபோதையில் சகோதரர்களுக்கு இடையிலான மோதலில் ஒருவர் உயிரிழப்பு; கொலையை மறைக்க முயன்ற தாயாரும் கைது!

DIN

மத்தியப் பிரதேசத்தில் மதுபோதையிலிருந்த சகோதரர்களுக்கு இடையேயான மோதலில் ஒருவர் பலியானார்.

மத்தியப் பிரதேசத்தின் போபால் மாவட்டத்தில் இந்திரா நகரில் சகோதரர்களான குல்தீப், அன்ஷுல் யாதவ், அமன் மூவரும் மதுபோதையில் வீட்டுக்குச் சென்றுள்ளனர். இந்த நிலையில், மது விருந்து கொண்டாடலாம் என்று சகோதரர்களிடம் அன்ஷுல் கூறியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து, இரவு நேரம் என்பதால், கடைகள் எதுவுமில்லாததையடுத்து, இறைச்சி வாங்கி வீட்டிலேயே கொண்டாடலாம் என்றும் தெரிவித்துள்ளார். ஆனால், வீட்டிற்குள் இறைச்சி கொண்டு வரக்கூடாது என்று அன்ஷுலின் சகோதரர்கள் திட்டவட்டமாகக் கூறியுள்ளனர்.

இதனையடுத்து, அவர்கள் மூவருக்கும் இடையிலான வாக்குவாதம் முற்றியது. தொடர்ந்து, மதுபோதையில் இருந்த அவர்கள், அன்ஷுலின் கழுத்தை கயிறைக் கொண்டு நெரித்ததால், அன்ஷுல் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இருப்பினும், அன்ஷுலை அவரது தாயார் அனிதா உள்பட 2 சகோதரர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அன்ஷுல் வெளியே சென்றுவிட்டு, வீட்டுக்கு வந்தவுடன் மயக்கமடைந்ததாக மருத்துவர்களிடம் அவர்கள் பொய் கூறியுள்ளனர்.

இருப்பினும், அன்ஷுலின் கழுத்தில் கயிறால் நெரித்த தடம் இருப்பதைக் கண்ட மருத்துவர்கள், காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து, கொலை செய்த சகோதரர்கள் இருவரையும் காப்பாற்ற முயன்ற அன்ஷுலின் தாயார், காவல்துறையினரிடமும் அதேபோல் பொய் கூறினார்.

தொடர்ந்து, மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் இறுதியாக கொலைக் குற்றத்தை ஒப்புக் கொண்டனர். மேலும், மறைத்து வைக்கப்பட்டிருந்த கயிறும் கண்டுபிடிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பள்ளியில் பெண்கள் பாதுகாப்பு விழிப்புணா்வு முகாம்

இந்தியாவுக்கும் தென்னாப்பிரிக்காவுக்கும் என்ன வித்தியாசம்? ரசிகை ஆவேசம்

Untitled Nov 03, 2025 10:37 pm

இறுதி வரை முன்னேறினாலும்... தென்னாப்பிரிக்காவைத் துரத்தும் சோகம்!

கொண்டாட்ட நாள்... சம்யுதா!

SCROLL FOR NEXT