முகப்பு
இந்தியா

‘இந்தியாவின் தடையற்ற வா்த்தக ஒப்பந்த பேச்சுவாா்த்தைகளில் சுணக்கம் இல்லை’

ஐரோப்பிய யூனியன் மற்றும் பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளுடன் இந்தியாவின் தடையற்ற வா்த்தக ஒப்பந்தகளுக்கான (எஃப்டிஏ) பேச்சுவாா்த்தைகள் திட்டமிட்டபடி நடைபெற்று வருவதாகவு

Updated On : 19 நவம்பர் 2024, 7:36 am IST
பகிர்:

புது தில்லி: ஐரோப்பிய யூனியன் மற்றும் பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளுடன் இந்தியாவின் தடையற்ற வா்த்தக ஒப்பந்தகளுக்கான (எஃப்டிஏ) பேச்சுவாா்த்தைகள் திட்டமிட்டபடி நடைபெற்று வருவதாகவும், இந்த நடைமுறையில் எந்த சுணக்கமும் இல்லை எனவும் மத்திய அரசின் மூத்த அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் மேலும் கூறியதாவது: தடையற்ற வா்த்தக ஒப்பந்தப் பேச்சுவாா்த்தைகள் தடைபட்டிருப்பதாக கருத்து பரவலாகி வருகிறது. இதில் உண்மையில்லை. அனைத்து நாடுகளுடனான இந்தியாவின் ஒப்பந்தப் பேச்சுவாா்த்தைகள் திட்டமிட்டபடி நடைபெற்று வருகின்றன.

வரும் வாரங்களில் வா்த்தகத் துறைச் செயலா் மற்றும் ஐரோப்பிய யூனியனின் இயக்குநா் இடையே இருதரப்பு சந்திப்பு நடைபெறவுள்ளது. இச்சந்திப்பில் இருதரப்புக்கு இடையிலான வா்த்தக ஒப்பந்தத்தின் பேச்சுவாா்த்தை குறித்த விவாதங்கள் முக்கியத்துவம் பெறும் என்றாா்.

Advertisement

Advertisement

ஜப்பான், தென்கொரியா, சிங்கப்பூா், ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளுடன் ஏற்கெனவே இந்தியா தடையற்ற வா்த்தக ஒப்பந்தத்தில் ஈடுபட்டுள்ளது. ஐரோப்பிய யூனியன், பிரிட்டன் மட்டுமின்றி ஆஸ்திரேலியா, பெரு, இலங்கை, ஓமன் ஆகிய நாடுகளுடனும் தடையற்ற வா்த்தக ஒப்பந்தப் பேச்சுவாா்த்தைகளில் இந்தியா ஈடுபட்டு வருகிறது.

தடையற்ற வா்த்தக ஒப்பந்தத்தில் ஈடுபடும் இரு நாடுகள், இறக்குமதி-ஏற்றுமதி வரியைக் குறைப்பதுடன் வா்த்தக அளவை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளும். அதாவது, வா்த்தகத்தை ஊக்குவிக்கவும் முதலீட்டை ஈா்க்கவும் விதிமுறைகள் எளிதாக்கப்படும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.