கோப்புப்படம். 
இந்தியா

பஞ்சாபில் சர்வதேச எல்லை அருகே 2 டிரோன்கள் கண்டுபிடிப்பு

பஞ்சாபின் அமிர்தசரஸில் சர்வதேச எல்லைக்கு அருகில் இரண்டு ஆளில்லா விமானங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

DIN

பஞ்சாபின் அமிர்தசரஸில் சர்வதேச எல்லைக்கு அருகில் இரண்டு ஆளில்லா விமானங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

பஞ்சாப் மாநிலம், அமிர்தசரஸ் மாவட்டத்தில் உள்ள இந்தியா-பாகிஸ்தான் எல்லைக்கு அருகே இரண்டு டிரோன்களும் ஒரு ஹெராயின் பாக்கெட்டும் கண்டுபிடிக்கப்பட்டதாக பிஎஸ்எஃப் செய்தித் தொடர்பாளர் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.

570 கிராம் ஹெராயின் அடங்கிய பொட்டலத்துடன் டிரோன் ஒன்று தவோகி கிராமம் அருகிலுள்ள வயல்வெளியில் இருந்து சனிக்கிழமை கைப்பற்றப்பட்டது.

பாகிஸ்தானில் மொபைல், இணைய சேவைகள் முடக்கம்!

தொடர்ந்து அதே நாளில் மற்றொரு டிரோன் ஒன்றும் மஹாவா கிராம அருகே ரோந்து வந்த எல்லைப் பாதுகாப்புப் படையினரால் வயல்வெளியில் இருந்து மீட்கப்பட்டது.

இரண்டு டிரோன்களும் எல்லையில் நிலைநிறுத்தப்பட்டுள்ள தொழில்நுட்ப எதிர் நடவடிக்கைகளால் விபத்துக்குள்ளாகியிருக்கலாம் என ஊகிக்கப்படுவதாக செய்தித் தொடர்பாளர் மேலும் கூறினார்.

பஞ்சாப் எல்லையில் இருந்து வெளிநாட்டு டிரோன்கள் அடிக்கடி பறிமுதல் செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உசுரே நீதானே.... ஜனனி!

பூம்புகார் சங்கமத்துறையில் ஆடிப்பெருக்கு விழா கோலாகலம்!

தீரன் சின்னமலை நினைவு நாள்! முதல்வர் மு.க. ஸ்டாலின் மலர் தூவி மரியாதை!

விருதே வாழ்த்திய தருணம்: ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி!

குடியரசுத் தலைவர் முர்முவுடன் பிரதமர் மோடி சந்திப்பு

SCROLL FOR NEXT