மகாராஷ்டிரம்: பள்ளத்தாக்கில் இருந்து சிதைந்த நிலையில் 2 உடல்கள் கண்டெடுப்பு
மகாராஷ்டிரத்தில் ஆழமான பள்ளத்தாக்கில் இருந்து சிதைந்த நிலையில் இரண்டு உடல்கள் வெள்ளிக்கிழமை மீட்கப்பட்டன.
மகாராஷ்டிரத்தில் ஆழமான பள்ளத்தாக்கில் இருந்து சிதைந்த நிலையில் இரண்டு உடல்கள் வெள்ளிக்கிழமை மீட்கப்பட்டன.
மகாராஷ்டிர மாநிலம், பீட் மாவட்டத்தில் உள்ள அஸ்தி வட்டத்தின் காட் பகுதியில் ஆழமான பள்ளத்தாக்கில் இருந்து 2 உடல்கள் கண்டெடுக்கப்பட்டதாக காவல் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். பலியானவர்கள் அஹில்யநகர் மாவட்டத்தைச் சேர்ந்த நிலேஷ் நாராயண் கோங்ரே (26) மற்றும் தினகர் நானா காட்ஷிங் (65) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து அந்த அதிகாரி மேலும் கூறுகையில், கோங்ரே பெலாப்பூர் (குர்த்) பகுதியையும் காட்ஷிங் (65) பதார்டி தாலுகாவில் உள்ள பில்வாடா கிராமத்தையும் சேர்ந்தவர்கள். கோங்ரே ஒரு மாதத்திற்கு முன்பு மச்சிந்திரநாத் கோயிலுக்குச் சென்றார். ஆனால் அதன் பிறகு காணாமல் போனார்.
Advertisement
Advertisement
அவரது குடும்பத்தினர் முன்னதாக அம்போரா காவல் நிலையத்தில் காணாமல் போனதாக புகார் அளித்திருந்தனர் என்றார். முதற்கட்ட விசாரணையில், கரடுமுரடான நிலப்பரப்பில் வழி தவறி இருவரும் பள்ளத்தாக்கில் விழுந்திருக்கலாம் என்று அம்போரா காவல் நிலைய உதவி ஆய்வாளர் மங்கேஷ் சல்வே தெரிவித்தார்.
இந்த வழக்கு குறித்து மேலும் விசாரணை நடைபெற்று வருவதாக அவர் மேலும் கூறினார்.
Two decomposed bodies were recovered from a deep ravine in Maharashtra's Beed district on Friday, a police official said.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.