அந்தமான் கடலில் சிக்கிய மியான்மர் படகு! 6,000 கிலோ போதைப் பொருள் பறிமுதல்!
அந்தமான் கடலில் சிக்கிய மியான்மர் படகில் இருந்து 6,016 கிலோ போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
அந்தமான் கடலில் சிக்கிய மியான்மர் நாட்டுப் படகில் இருந்து 6,000 கிலோவுக்கும் அதிகமாக போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
அந்தமான் கடலில் சிக்கிய மியான்மர் நாட்டு மீன்பிடி படகில் இருந்து 6,016 கிலோகிராம் மெத்தம்பேட்டமைனை இந்திய கடலோர காவல்படை கைப்பற்றியது. இதுவரை இந்திய கடற்படையால் மீட்கப்பட்டுள்ள மிகப்பெரிய போதைப்பொருள் கடத்தல் இதுவாகும்.
இரண்டு நாட்களாக நடத்தப்பட்ட இந்த சோதனையில், போதைப்பொருள் கடத்திவந்த படகை இடைநிறுத்துவதற்காக கடற்படை விமானம் மற்றும் கடற்படை பாதுகாப்பு கப்பல்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
Advertisement
Advertisement
படகில் இருந்த 6 பேர் மியான்மர் நாட்டைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டு காவல்துறையினர் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டுள்ளனர். படகில் இருந்த மெத்தம்பேட்டமைன் மற்றும் செயற்கைக்கோள் தொலைபேசியை மீட்டு அதிகாரிகள் விசாரணைக்காக அந்தமான் தலைநகர் ஸ்ரீவிஜயபுரத்திற்கு கொண்டு சென்றனர்.
அந்தமான் கடலில் சமீபகாலமாக ரோஹிங்கியா படகுகள் மற்றும் மியான்மர் நாட்டுப் படகுகள் அதிகளவில் இந்திய கடற்பகுதியில் போதைப்பொருள் கடத்திவருவது அதிகரித்துள்ளதாக இந்திய கடற்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.