கோவா முதல்வரின் தனிப்பட்ட மின்னஞ்சல் கணக்கு ஹேக் செய்யப்பட்டு பின்னர் உடனடியாக மீட்கப்பட்டது.
கோவா முதல்வர் பிரமோத் சாவந்தின் தனிப்பட்ட மின்னஞ்சல் கணக்கு(ஜிமெயில் கணக்கு) சனிக்கிழமை திடீரென ஹேக் செய்யப்பட்டது.
இதையடுத்து அதனை மீட்க காவல்துறையின் சைபர் கிரைம் பிரிவு உடனடியாக செயல்பட்டது.
பின்னர் மின்னஞ்சல் நான்கு முதல் ஐந்து மணி நேரத்திற்குப் பிறகு மீட்டெடுக்கப்பட்டது என்று மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார். ஹேக்கரைக் கண்டுபிடிக்க விசாரணை நடந்து வருகிறது.
முதல்வரின் ஜிமெயில் கணக்கு யூடியூப் மற்றும் பிற சமூக ஊடகங்களுடன் இணைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.