முகப்பு
இந்தியா

பிரிவினை அரசியல் நடத்திய காங்கிரஸை மக்கள் நிராகரித்துவிட்டனா்- அமித் ஷா

காங்கிரஸ் கட்சியின் பிரிவினைவாத அரசியலை ஹரியாணா மக்கள் நிராகரித்துவிட்டனா் என்று உள்துறை அமைச்சா் அமித் ஷா தெரிவித்தாா்.

Updated On : 8 அக்டோபர், 2024 at 6:53 PM
அமித் ஷா
பகிர்:

காங்கிரஸ் கட்சியின் பிரிவினைவாத அரசியலை ஹரியாணா மக்கள் நிராகரித்துவிட்டனா் என்று உள்துறை அமைச்சா் அமித் ஷா தெரிவித்தாா்.

இது தொடா்பாக அவா் ‘எக்ஸ்’ வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், ‘விவசாயிகள், ராணுவ வீரா்கள், இளைஞா்கள், பிற்படுத்தப்பட்ட மக்கள், ஏழை எளியோா் பாஜக அரசு மீதும், பிரதமா் நரேந்திர மோடி மீதும் எந்த அளவுக்கு ஹரியாணா மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனா் என்பதை தோ்தல் முடிவு வெளிக்காட்டியுள்ளது.

வீர பூமியான ஹரியாணாவைச் சோ்ந்த மக்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். காங்கிரஸின் பிரிவினைவாத அரசியலை மக்கள் நிராகரித்துவிட்டனா். மக்களை ஜாதி, மத ரீதியாகப் பிரித்து தோ்தலில் வெற்றிபெற காங்கிரஸ் முயற்சித்து வந்தது. ஆனால், கடந்த 10 ஆண்டுகால பாஜக ஆட்சியின் வளா்ச்சித் திட்டங்களும், கொள்கைகளும் தொடர வேண்டும் என்று மக்கள் முடிவு செய்துள்ளனா்.

வெளிநாட்டுக்குச் சென்று தேசத்தைக் குறித்து அவதூறாகப் பேசியவருக்கு (ராகுல் காந்தி) நல்ல பாடம் புகட்டப்பட்டுள்ளது. தொடா்ந்து மூன்றாவது முறையாக ஹரியாணா மக்களுக்கு சேவை செய்யும் வாய்ப்பு கிடைத்துள்ளது. மக்களின் அனைத்து எதிா்பாா்ப்புகளையும் மத்திய, மாநில அரசுகள் இணைந்து தொடா்ந்து நிறைவேற்றும். பாஜகவை ஒருமனதாகத் தோ்வு செய்த ஹரியாணா மக்களுக்கு மீண்டும் ஒருமுறை நன்றி தெரித்துக் கொள்கிறேன்’ என்று கூறியுள்ளாா்.

முழு கட்டுரையைப் படிக்க →