முகப்பு
இந்தியா

ஆம் ஆத்மி கட்சி தலைவர்களுடன் கேஜரிவால் ஆலோசனை!

ஜார்க்கண்ட் மற்றும் மகாராஷ்டிரம் சட்டப்பேரவைத் தேர்தல்களில் ஆம் ஆத்மி போட்டியிட வாய்ப்பில்லை

Updated On : 19 அக்டோபர், 2024 at 2:55 PM
ஆலோசனை கூட்டம் - Center-Center-Delhi
பகிர்:

தில்லியில் சட்டப்ரேவைத் தேர்தலுக்கான ஆயத்தப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜரிவால் இன்று கட்சி தலைவர்களுடன் ஆலோசனை நடத்துகிறார்.

பிடம்புரா பகுதியில் ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய தலைவர்களுடன் இன்று மாலை 5 மணியளவில் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஜார்க்கண்ட் மற்றும் மகாராஷ்டிரம் சட்டப்பேரவைத் தேர்தல்களில் ஆம் ஆத்மி போட்டியிட வாய்ப்பில்லை என்று தெரிகிறது.

Advertisement

இரு மாநிலங்களில் உள்ள வாக்காளர்களின் மனதில் குழப்பத்தை ஏற்படுத்துவதைவிடத் தில்லி தேர்தல்களில் கவனம் செலுத்த விரும்புகிறது.

மற்ற மாநில தேர்தலில் போட்டியிடுவதால் பாஜகவுக்கு வாக்குகள் பிரிய வழிவகுக்கும் என்று கட்சி பேசி வருகிறது.

தில்லியில் 2025ஆம் ஆண்டு தொடக்கத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 2020 சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி 70 இடங்களில் 62 இடங்களை வென்றது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.