போதைப்பொருள் வைத்திருந்த கேரள நடிகை கைது!
நடிகைக்கு போதைப்பொருளை வழங்கியவர்கள் குறித்தும் விசாரணை
கேரளத்தில் போதைப்பொருள் வைத்திருந்த நடிகையை காவல்துறையினர் கைது செய்தனர்.
கேரளத்தில் பாலக்காட்டைச் சேர்ந்த நடிகை ஷம்நாத் (34) போதைப்பொருள் பயன்படுத்தி வருவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து, நடிகையின் வீட்டில் வெள்ளிக்கிழமை (அக். 18) இரவில் காவல்துறையினர் சோதனை நடத்தினர்.
சோதனையில், தடை செய்யப்பட்ட மருந்துகளை நடிகை வைத்திருப்பது தெரிய வந்தது. அவர் அதனைப் பயன்படுத்தி வந்திருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.
Advertisement
Advertisement
இதனைத் தொடர்ந்து, நடிகையை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும், அவருக்கு போதைப்பொருளை வழங்கியவர்கள் குறித்தும் மேற்பட்ட விசாரணை நடந்து வருவதாகவும் தெரிவித்தனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.