போதைப்பொருள் வைத்திருந்த கேரள நடிகை கைது!
நடிகைக்கு போதைப்பொருளை வழங்கியவர்கள் குறித்தும் விசாரணை
கேரளத்தில் போதைப்பொருள் வைத்திருந்த நடிகையை காவல்துறையினர் கைது செய்தனர்.
கேரளத்தில் பாலக்காட்டைச் சேர்ந்த நடிகை ஷம்நாத் (34) போதைப்பொருள் பயன்படுத்தி வருவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து, நடிகையின் வீட்டில் வெள்ளிக்கிழமை (அக். 18) இரவில் காவல்துறையினர் சோதனை நடத்தினர்.
சோதனையில், தடை செய்யப்பட்ட மருந்துகளை நடிகை வைத்திருப்பது தெரிய வந்தது. அவர் அதனைப் பயன்படுத்தி வந்திருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, நடிகையை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும், அவருக்கு போதைப்பொருளை வழங்கியவர்கள் குறித்தும் மேற்பட்ட விசாரணை நடந்து வருவதாகவும் தெரிவித்தனர்.