சிறுமி கவலைக்கிடம் 
இந்தியா

ஆசிரியர் தாக்கியதில் மூளைக்காயம்: சிறுமிக்கு வென்டிலேட்டர் உதவியோடு சிகிச்சை

ஆசிரியர் தாக்கியதில் மூளைக்காயமடைந்த 9 வயது சிறுமி கவலைக்கிடம்

DIN

மும்பை: டியூசன் ஆசிரியர், காதுக்கு அருகே இரு முறை பலமாக அறைந்ததில், மூளைக் காயமடைந்த 9 வயது சிறுமி, வென்டிலேட்டர் உதவியோடு கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

மும்பே அருகே, நல்லசோபரா என்ற பகுதியில், 9 வயது சிறுமியை, அக்.5ஆம் தேதி ஆசிரியர் தாக்கிய நிலையில், கடந்த சில நாள்களாக, சிறுமிக்கு சில உடல்நலப் பாதிப்புகள் ஏற்பட்டதைத் தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் கூறுகையில், 20 வயது டியூசன் ஆசிரியர் ரத்னா சிங், வகுப்பில் சிறுமியின் கன்னத்தில் இரண்டு முறை அடித்துள்ளார். ஆசிரியர் கடுமையாக தாக்கியதில், சிறுமியின் கம்மல் கன்னத்தில் புதைந்துபோயிருக்கிறது.

இந்த நிலையில், அடுத்தடுத்து நாள்களில் சிறுமிக்கு பல்வேறு உடல்நலப் பாதிப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதித்துசோதனை செய்தபோதுதான், அவரது மூளையில் பலத்த காயம் ஏற்பட்டு, தாடை இறுதி, மூச்சுக்குழாயில் காயம் ஏற்பட்டிருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.

கடந்த ஒன்பது நாள்களாக அவர் வென்டிலேட்டரில் வைக்கப்பட்டு கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்று தெரிவித்துள்ளனர். இது குறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டு, ஆசிரியரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மனைவியைக் கொன்ற கணவா் கைது

எடப்பாடியில் 31 சவரன் நகை, பணம் திருட்டு

நீண்ட நேரம் கைப்பேசி பாா்த்ததை தந்தை கண்டித்ததால் இளைஞா் தற்கொலை

குழந்தையை தத்தெடுக்க வந்த தம்பதியிடம் பணம் பறித்தவா் கைது

பணிக்கொடை, ஊதியம் கேட்டு சுங்கச்சாவடி ஊழியா்கள் போராட்டம்

SCROLL FOR NEXT