சரத் பவார் 
இந்தியா

மகாராஷ்டிர தேர்தல்: இறுதி கட்டத்தில் தொகுதிப் பங்கீடு! சரத் பவார்

மகா விகாஸ் அகாடியில் இறுதி கட்டத்தில் தொகுதிப் பங்கீடு..

DIN

மகா விகாஸ் அகாடி கூட்டணியில் உள்ள கட்சிகளிடையே தொகுதி பங்கீடு இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாக தேசியவாத காங்கிரஸ்(சரத் பவார்) தலைவர் சரத் பவார் தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிரத்தில் 288 இடங்களைக் கொண்ட மாநில சட்டப்பேரவைக்கு அடுத்த மாதம் 20-ஆம் தேதி தோ்தல் நடைபெறுகிறது.

இந்த தேர்தலில் போட்டியிடும் மஹாயுதி கூட்டணி மற்றும் மகா விகாஸ் அகாடி கூட்டணிக் கட்சிகள் இடையே தொகுதி பங்கீடு தீவிரமாக நடைபெற்று வருகின்றது.

இரு கூட்டணியில் உள்ள கட்சிகளும் முதல் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை அறிவித்தாலும், சில தொகுதிகளில் யாருக்கு ஒதுக்குவது என்று கூட்டணிக்குள் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில், மகா விகாஸ் அகாதியில் இடம்பெற்றுள்ள சரத் பவார் கூறியதாவது:

மகா விகாஸ் அகாதி கூட்டணி அனைத்து தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன. மொத்தமுள்ள 288 தொகுதிகளில் 95 சதவிகித இடங்களில் ஒருமனதாக ஒதுக்கீடு நிறைவடைந்துவிட்டது. பிற தொகுதிகளுக்கான பேச்சுவார்த்தைந் நடைபெற்று வருகின்றன.

மகாராஷ்டிரத்தில் ஆட்சியை மாற்ற நாங்கள் விரும்புகிறோம். மக்களின் பல பிரச்னைகள் நிலுவையில் உள்ளன. தற்போதைய ஆட்சியாளர்களால் பிரச்னைகள் தீர்க்கப்படவில்லை. நாங்கள் செய்வோம் என்று மக்களுக்கு உறுதி அளிக்கிறேன்.” எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழறிஞா் சீகன்பால்கு நினைவு மணிமண்டபம் கட்ட அடிக்கல் நாட்டு விழா

தங்கம் வெல்லும் வாய்ப்பை சீனாவிடம் நழுவவிட்ட இந்தியா! சாத்விக், சிராக் இணைக்கு வெண்கலம்!

இதற்காக ஒரு மாதத்துக்கும் மேலாக காத்திருந்தோம்; இலங்கை தொடருக்கு முன்பாக ஹர்மன்பிரீத் உற்சாகம்!

மதச்சார்பின்மை சொல்லைக் கேட்டாலே வேப்பங்காயாக கசக்கிறது பாஜகவுக்கு: முதல்வர் ஸ்டாலின்

வட மாநிலங்களில் காற்று மாசு: மலைப் பிரதேசங்களுக்குப் படையெடுத்த சுற்றுலாப் பயணிகள்!

SCROLL FOR NEXT