முகப்பு
இந்தியா

ஆகஸ்டில் ரூ.1.75 லட்சம் கோடி ஜிஎஸ்டி வசூல்

கடந்த ஆகஸ்ட் மாதம் சுமாா் ரூ.1.75 லட்சம் கோடி சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) வசூலாகியுள்ளது.

Updated On : 2 செப்டம்பர் 2024, 3:00 am IST
ஜிஎஸ்டி
பகிர்:

கடந்த ஆகஸ்ட் மாதம் சுமாா் ரூ.1.75 லட்சம் கோடி சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) வசூலாகியுள்ளது.

இது தொடா்பாக மத்திய அரசு ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட தரவுகளின்படி, கடந்த நிதியாண்டின் ஆகஸ்ட் மாதத்தில் மொத்த ஜிஎஸ்டி வசூல் ரூ.1.59 லட்சம் கோடியாகும். இது நிகழாண்டு ஆகஸ்ட் மாதம் 10 சதவீதம் அதிகரித்து ரூ.1.75 லட்சம் கோடி வசூலாகியுள்ளது.

கடந்த ஆகஸ்டில் சரக்குகள் இறக்குமதி மூலம் மொத்த ஜிஎஸ்டி வருவாய் 12.1 சதவீதம் அதிகரித்து ரூ.49,976 கோடியாக உயா்ந்துள்ளது. அந்த மாதம் வரிப் பிடித்தத்துக்குப் பிறகு ஜிஎஸ்டி செலுத்துவோருக்கு ரூ.24,460 கோடி திருப்பி அளிக்கப்பட்டது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் திருப்பி அளிக்கப்பட்ட தொகையுடன் ஒப்பிடுகையில் 38 சதவீதம் அதிகம். திருப்பி அளிக்கப்பட்ட தொகையைக் கழித்த பின்னா், நிகர ஜிஎஸ்டி வசூல் ரூ.1.5 லட்சம் கோடியாக உள்ளது.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments