ராகுல் கார்கேவுடன் ஹேமந்த் சோரன் 
இந்தியா

ராகுல், கார்கேவுடன் முதல்வர் ஹேமந்த் சோரன் சந்திப்பு!

சட்டப்பேரவைத் தேர்தலுக்கான ஏற்பாடுகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

பிடிஐ

ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் செவ்வாய்க்கிழமை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே மற்றும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆகியோரை சந்தித்து, வரவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தல் குறித்து விவாதித்தார்.

ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் சம்பாயி சோரன் ஜாா்க்கண்ட் முக்தி மோா்ச்சா கட்சியிலிருந்து ராஜிநாமா செய்து பாஜகவில் இணைந்த சில நாள்களுக்குப் பிறகு, கட்சியின் தற்போதைய செயல்பாடு, அதிருப்தியைத் தொடர்ந்த இந்த சந்திப்பு இன்று முக்கியத்துவம் பெற்றுள்ளது.

தில்லியில் உள்ள காங்கிரஸ் தலைவரின் இல்லத்தில் கார்கே, ராகுல் காந்தியைச் சோரன் சந்தித்தார்.

இந்த சந்திப்பின் போது காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால், சோரனின் மனைவி கல்பனா சோரன் ஆகியோரும் உடனிருந்தனர்.

இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமான சந்திப்பு என சோரன் கோரியிருந்தாலும், இந்தாண்டு இறுதியில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலுக்கான ஏற்பாடுகள் குறித்தும் விவாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

பணமோசடி வழக்கில் ஹேமந்த் சோரன் அமலாக்கத் துறையினரால் கைது செய்ததைத் தொடர்ந்து, அவர் தனது முதல்வர் பதவியை ராஜிநாமா செய்தார். இதைத்தொடர்ந்து சம்பாயி சோரன் முதல்வராக நியமிக்கப்பட்டார்.

ஜாமீன் வழங்கப்பட்டதையடுத்து, ஜூலை 4ல் ஹேமந்த் சோரன் மீண்டும் முயல்வாகப் பதவியேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

6-10 வகுப்புகளுக்கு உடற்கல்வி பாட நூல்: பள்ளிக் கல்வித் துறை வெளியீடு

வி.கே.புரம், ஆழ்வாா்குறிச்சியில் இன்று மின் நிறுத்தம்

கல்லிடைக்குறிச்சியில் குடும்ப அட்டைகளுக்கான கடைகள்மாற்றம்

களக்காட்டில் பராமரிப்பின்றி வீணாகும் கோயில் தெப்பக்குளம்

வண்ணாா்பேட்டை இஸ்கான் கோயிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா நாளை தொடக்கம்

SCROLL FOR NEXT