கோப்புப் படம் 
இந்தியா

குளத்தில் சடலங்களாகக் கிடந்த காணாமல் போன சிறுமிகள்!

உடலில் காயங்கள் ஏதும் இல்லையென முதற்கட்டப் பார்வையில் தகவல்

DIN

காணாமல் போன சிறுமிகளை தேடப்பட்டு வந்த நிலையில், குளத்தில் சடலங்களாகக் கண்டெடுக்கப்பட்டனர்.

உத்தரப் பிரதேசத்தின் கோண்டா கிராமத்தில் 12, 16 வயதுடைய சிறுமிகள் இருவர் வைக்கோல் சேகரிக்க, சனிக்கிழமை பிற்பகலில் சென்றுள்ளனர். ஆனால், நள்ளிரவு வரை அவர்கள் வீடு திரும்பாததால், அவர்களது குடும்பத்தினர், அப்பகுதி முழுவதும் தேடி வந்துள்ளனர்.

இருப்பினும், சிறுமிகள் கிடைக்காததால், காவல் நிலையத்தில் சிறுமிகள் காணாமல் போய்விட்டதாக புகார் அளித்துள்ளனர்.

இந்த நிலையில், சிறுமி ஒருவரின் தாயார், ஞாயிற்றுக்கிழமை காலையில் குளத்திற்கு சென்றபோது, காணாமல் போன சிறுமிகளின் உடல்கள் இறந்த நிலையில் குளத்தில் மிதப்பதைக் கண்டுள்ளார்.

இதனையடுத்து, தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று, சிறுமிகளின் உடல்களை, பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இருப்பினும், சிறுமிகளின் உடல்களில் எந்தவித காயமும் இல்லையென முதற்கட்டப் பார்வையில் தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சோளிங்கா் யோக நரசிம்மா் கோயில் தீா்த்தக்குளம் சீரமைக்கும் பணி தொடக்கம்!

சிவகிரி வட்டத்தில் யானைகளை கண்காணிக்கும் பணியில் ‘ட்ரோன்’

வாக்குச் சாவடி நிலை அலுவலா்களுக்கு ஆட்சியா் பாராட்டு

குறைந்துவரும் குள்ளநரி உள்ளிட்ட விலங்குகளை பாதுகாக்க வனத்துறை தீவிரம்

ஆளுநரை கண்டித்து டிச.4-இல் திக ஆா்ப்பாட்டம்: கி. வீரமணி

SCROLL FOR NEXT