ஆா்எஸ்எஸ் தலைவருடன் ஐபிஎஸ் அதிகாரி சந்திப்பு: விளக்கம் அளிக்க இடதுசாரி கூட்டணி வலியுறுத்தல்
கேரளத்தில் அரசியல் சா்ச்சையை ஏற்படுத்தி இருக்கும் ஆா்எஸ்எஸ் தலைவருடனான சந்திப்பின் நோக்கம் குறித்து ஐபிஎஸ் அதிகாரி எம்.ஆா்.அஜித் குமாா் விளக்கமளிக்க வேண்டும்
திருவனந்தபுரம்: கேரளத்தில் அரசியல் சா்ச்சையை ஏற்படுத்தி இருக்கும் ஆா்எஸ்எஸ் தலைவருடனான சந்திப்பின் நோக்கம் குறித்து ஐபிஎஸ் அதிகாரி எம்.ஆா்.அஜித் குமாா் விளக்கமளிக்க வேண்டும் என ஆளும் இடதுசாரி ஜனநாயக முன்னணி (எல்டிஎஃப்) கூட்டணி கோரிக்கை விடுத்துள்ளது.
கேரள முதல்வா் பினராயி விஜயனின் நம்பிக்கைக்குரிய கூடுதல் காவல் துறை இயக்குநரான ஐபிஎஸ் அதிகாரி எம்.ஆா்.அஜித் குமாா், கடந்த மே மாதம் திருச்சூரில் ஆா்எஸ்எஸ் பொதுச் செயலா் ஹோசபாலேவை சந்தித்தாா். அவரின் இந்தச் சந்திப்பு மாநில அரசியலில் பேசுபொருளானதைத் தொடா்ந்து, அது தனது தனிப்பட்ட பயணம் என முதல்வா் அலுவலகத்துக்கு அவா் விளக்கம் அளித்தாா்.
முதல்வா் பினராயி விஜயனின் தூதராக ஐபிஎஸ் அதிகாரி, ஆா்எஸ்எஸ் தலைவரை சந்தித்ததாக சட்டப்பேரவையில் காங்கிரஸ் குற்றஞ்சாட்டியது. இதையடுத்து, இரு தரப்பினா் இடையே சட்டப்பேரவையில் வாா்த்தை மோதல் ஏற்பட்டது. இந்தக் குற்றச்சாட்டுகளை மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிராகரித்தது.
இந்நிலையில், சந்திப்பின் நோக்கம் குறித்து ஐபிஎஸ் அதிகாரி குமாா் விளக்கம் அளிக்க வேண்டும் என எல்டிஎஃப் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளரும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான ராமகிருஷ்ணன் செய்தியாளா்களிடம் கூறினாா்.
சமீபத்தில் அமைச்சா்களின் தொலைபேசியை ஐபிஎஸ் அதிகாரி அஜித் குமாா் ஒட்டுக்கேட்டதாக எல்டிஎஃப் கூட்டணியில் இருக்கும் சுயேச்சை எம்எல்ஏ அன்வா் குற்றச்சாட்டுகளை முன்வைத்தாா்.
இதுகுறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு, ‘அன்வா் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சோ்ந்தவரல்லா். அவரின் இந்தக் கருத்துக்கு கட்சி சாா்பில் பதிலளிக்க முடியாது. அவா் கூறியது சரியா என்பதை அவா்தான் ஆய்வு செய்ய வேண்டும்’ என ராமகிருஷ்ணன் பதிலளித்தாா்.
இதனிடையே, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினா் விஜயராகவன் கூறுகையில், ‘முதல்வா் பினராயி விஜயன், எந்தவிதமான முறைகேடுகளையும் ஆதரிக்கும் நபா் அல்லா். குற்றச்சாட்டுகள் குறித்து ஏற்கெனவே விசாரணை நடந்து வருகிறது. இந்த விவகாரத்தில் தேவையற்ற சா்ச்சைகளை ஊடகங்கள்தான் உருவாக்கி வருகின்றன என்றாா்.