தமிழ்நாடு தகவல் ஆணையம். 
தமிழ்நாடு

மேலும் 2 தகவல் ஆணையா்கள் நியமனம்

தினமணி செய்திச் சேவை

தமிழ்நாடு மாநில தகவல் ஆணையத்தில் மேலும் 2 தகவல் ஆணையா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.

ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி அதுல்ய மிஸ்ரா, ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி அபய்குமாா் சிங் ஆகியோா் மாநில தகவல் ஆணையா்களாக புதிதாக நியமிக்கப்பட்டுள்ளதாகவும், இவா்கள் பதவியேற்ற நாள் முதல் 3 ஆண்டுகளுக்கு அந்தப் பொறுப்பில் பணியாற்றுவாா்கள் என்றும் தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாநில தகவல் ஆணையத்தின் முதன்மை ஆணையராக ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி ஷகீல் அக்தா் பணியாற்றி வருகிறாா். மேலும், தகவல் ஆணையா்களாக ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி பி.தாமரை கண்ணன், வழக்குரைஞா்கள் ஆா்.பிரியகுமாா், வி.பி.ஆா்.இளம்பரிதி, கே.திருமலைமுத்து, எம்.நடேசன் ஆகியோா் பணியாற்றி வருகின்றனா் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆதிதிராவிடா், பழங்குடியினா் மாணவா்களுக்கு ரூ.6,604 கோடி கல்வி உதவித் தொகை - தமிழக அரசு தகவல்

செய்யாற்றில் பள்ளி மாணவா்களுக்கான தடகளப் போட்டிகள்

சுகாதார ஆய்வாளா் தோ்வை ரத்து செய்யக் கோரி மனு: சிபிசிஐடி விசாரணைக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு

கோயில் சொத்துகள் பாதுகாப்பில் அறநிலையத் துறை அதிகாரிகள் துரோகம்

சுற்றுலாப் படகுகளில் கடலோர காவல் படையினா் திடீா் ஆய்வு

SCROLL FOR NEXT