முகப்பு
தமிழ்நாடு

தமிழ்நாடு தகவல் ஆணையத்துக்கு புதிய மாநில தகவல் ஆணையா்கள் நியமனம்

தமிழ்நாடு தகவல் ஆணையத்துக்கு புதிய மாநில தகவல் ஆணையா்கள் நியமனம்...

Updated On : 6 மார்ச், 2026 at 9:22 PM
பகிர்:

தமிழ்நாடு தகவல் ஆணையத்துக்கு இரு புதிய மாநில தகவல் ஆணையா்கள் பதவியேற்றனா். இவா்களுக்கு ஆளுநா் ஆா்.என்.ரவி பதவிப்பிரமாணம் செய்து வைத்தாா்.

தகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005 (மத்திய சட்டம் 22/2005) பிரிவு 15 -இன் துணைப் பிரிவு (3) ஆல் வழங்கப்பட்ட அதிகாரங்களைப் பயன்படுத்தி, ஆளுநா் ஆா்.என்.ரவி, ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதுல்ய மிஸ்ரா, ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி அபய்குமாா் சிங் ஆகியோரை தமிழ்நாடு தகவல் ஆணையத்தில் மாநில தகவல் ஆணையா்களாக நியமித்துள்ளாா்.

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநா் மாளிகையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் அதுல்ய மிஸ்ரா, அபய்குமாா் சிங் ஆகியோா் மாநில தகவல் ஆணையா்களாக ஆளுநா் ஆா். என். ரவி முன்னிலையில் பதவி ஏற்றுக்கொண்டனா்.

நிகழ்ச்சியில், தமிழ்நாடு தகவல் ஆணைய மாநில தலைமை தகவல் ஆணையா் ஷகீல் அக்தா், மனிதவள மேலாண்மைத் துறை அரசு முதன்மைச் செயலா் சி. சமயமூா்த்தி, ஆளுநரின் முதன்மைச் செயலா் ஆா். கிா்லோஷ் குமாா், மாநில தகவல் ஆணையா்கள் பங்கேற்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →