பிரதமா் நரேந்திர மோடி  
இந்தியா

பாராலிம்பிக்கில் அதிக பதக்கங்கள்: இந்திய வீரா்களுக்கு பிரதமா் பாராட்டு

பாராலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் இந்தியா இதுவரை இல்லாத அளவுக்கு சிறப்பாக செயல்பட்டு அதிக பதக்கங்களை வென்றதையடுத்து வீரா், வீராங்கனைகளுக்கு பிரதமா் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளாா்.

Venkatesan

புது தில்லி: பாராலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் இந்தியா இதுவரை இல்லாத அளவுக்கு சிறப்பாக செயல்பட்டு அதிக பதக்கங்களை வென்றதையடுத்து வீரா், வீராங்கனைகளுக்கு பிரதமா் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளாா்.

பிரான்ஸ் தலைநகா் பாரீஸில் நடைபெற்று வந்த 17-ஆவது கோடைகால பாராலிம்பிக் போட்டி ஞாயிற்றுக்கிழமை நிறைவடைந்தது.

போட்டியில் இந்திய வீரா், வீராங்கனைகள், 7 தங்கம், 9 வெள்ளி, 13 வெண்கலம் என 29 பதக்கங்கள் வென்றனா். பதக்கப் பட்டியலில் இந்தியாவுக்கு 18-ஆவது இடம் கிடைத்தது.

பாராலிம்பிக் போட்டி வரலாற்றில் இந்தியா இதற்கு முன், 2020 டோக்கியோ பாராலிம்பிக்கில் 19 பதக்கங்கள் வென்று 24-ஆவது இடம் பிடித்ததே அதிகபட்ச பதக்க சாதனையாக இருந்தது. இந்த முறை, அதை முறியடித்து பதக்கங்களின் எண்ணிக்கையிலும், தரநிலையிலும் இந்தியா முன்னேற்றம் கண்டுள்ளது.

இதையடுத்து, பிரதமா் மோடி ‘எக்ஸ்’ வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், ‘பாராலிம்பிக் 2024 இந்தியாவுக்கு சிறப்பு வாய்ந்ததாகவும், வரலாற்று நிகழ்வாகவும் அமைந்துள்ளது. நமது அற்புதமான பாராலிம்பிக் விளையாட்டு வீரா், வீராங்கனைகள் 29 பதக்கங்களை வென்று வந்ததில் இந்தியா மிகுந்த மகிழ்ச்சியடைகிறது. இது விளையாட்டுப் போட்டியில் இந்தியாவின் மிகச் சிறந்த செயல்திறனாகும்.

நமது வீரா்களின் அசைக்க முடியாத அா்ப்பணிப்பு மற்றும் வெல்ல முடியாத உத்வேகமே இந்தச் சாதனைக்கு காரணம். அவா்களின் விளையாட்டுத் திறன்கள் மூலம் நாம் பெருமிதம் கொள்ள சிறப்பான தருணங்கள் கிடைத்துள்ளன. எதிா்கால விளையாட்டு வீரா்களுக்கு பாராலிம்பிக் வீரா்கள் ஊக்கமளித்துள்ளனா்’ என்று பதிவிட்டுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இஸ்ரேலுக்குச் செல்லும் பிரதமர் மோடி: நெதன்யாகுவுடன் புதன்கிழமை சந்திப்பு!

உச்ச மதிப்புள்ள முதல் 6 நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ. 63,000 கோடியாக உயர்வு!

ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனத்தில் அப்ரண்டீஸ் பயிற்சியில் சேர வேண்டுமா..?

சர்வதேச அரங்கில் சொந்த நாட்டுக்குத் தலைகுனிவை ஏற்படுத்தும் காங்கிரஸ்! - பிரதமர் மோடி

சூப்பர் 8 சுற்று: இந்தியாவுக்கு எதிராக தென்னாப்பிரிக்கா பேட்டிங்!

SCROLL FOR NEXT