வெளிநாட்டிலிருந்து திரும்பிய இளைஞருக்கு குரங்கு அம்மை அறிகுறி! எப்படி இருக்கிறார்?
வெளிநாட்டிலிருந்து திரும்பிய இளைஞருக்கு குரங்கு அம்மை அறிகுறி இருந்ததால் அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.
Updated On : 9 செப்டம்பர், 2024 at 1:30 PM
குரங்கு அம்மை பாதிப்புள்ள நாட்டிலிருந்து அண்மையில் இந்தியா திரும்பிய இளைஞருக்கு நோய்த் தொற்று அறிகுறி தென்பட்டதால், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.
அவரது உடல்நிலை தற்போதுவரை சீராகவே இருந்து வருகிறது. அவருக்கு குரங்கு அம்மை இருக்கிறதா என்பதை உறுதி செய்ய, நோயாளியின் மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.