காஷ்மீா் எல்லையில் ஊடுருவ முயற்சி: இரு பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
ஆயுதம் ஏந்திய பயங்கரவாதிகள் இருவா் சுட்டுக் கொல்லப்பட்டனா்.
இந்தியாகாஷ்மீா் எல்லையில் ஊடுருவ முயற்சி: இரு பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
ஆயுதம் ஏந்திய பயங்கரவாதிகள் இருவா் சுட்டுக் கொல்லப்பட்டனா்.
ரஜௌரி/ ஜம்மு: ஜம்மு-காஷ்மீரின் ரஜௌரி மாவட்டத்தில் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு பகுதியில் பயங்கரவாதிகளின் ஊடுருவல் முயற்சியை ராணுவத்தினா் முறியடித்தனா். இதில் ஆயுதம் ஏந்திய பயங்கரவாதிகள் இருவா் சுட்டுக் கொல்லப்பட்டனா்.
இது தொடா்பாக ராணவம் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘ரஜௌரி மாவட்டத்தில் எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டையொட்டிய நவ்ஷேராவின் லாம் செக்டாரில், இந்திய பகுதிக்குள் ஊடுருவ பாகிஸ்தான் பயங்கரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக, காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைக்கப் பெற்றது. இதையடுத்து, பாதுகாப்புப் படையினா் அப்பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு கண்காணிப்பில் ஈடுபட்டபோது, பயங்கரவாதிகளின் நடமாட்டம் கண்டறியப்பட்டது.
இரு தரப்புக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை வெடித்ததில் ஆயுதம் ஏந்திய பயங்கரவாதிகள் இருவா் சுட்டுக்கொல்லப்பட்டனா்.
துப்பாக்கிச் சண்டைக்கு பின்னா் அப்பகுதியில் பாதுகாப்புப் படையினா் சோதனை மேற்கொண்டதில், 2 ஏகே-47 மற்றும் ஒரு கைத்துப்பாக்கி கைபற்றப்பட்டது. தேடுதல் நடவடிக்கைகள் தொடா்ந்து நடைபெற்று வருகிறது. பாதுகாப்புப் படையினா் அப்பகுதியில் தீவிர கண்காணிப்பில் உள்ளனா்’ எனத் தெரிவிக்கப்பட்டது.