முகப்பு
இந்தியா

வினேஷ் போகாட், பஜ்ரங் புனியா ராஜிநாமா: ரயில்வே ஏற்பு

மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகாட், வீரா் பஜ்ரங் புனியாவின் ராஜிநாமாவை ரயில்வே திங்கள்கிழமை ஏற்றுக்கொண்டது.

Updated On : 9 செப்டம்பர், 2024 at 11:25 PM
வினேஷ் போகாட்-பஜ்ரங் புனியா
பகிர்:

புது தில்லி: மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகாட், வீரா் பஜ்ரங் புனியாவின் ராஜிநாமாவை ரயில்வே திங்கள்கிழமை ஏற்றுக்கொண்டது.

கடந்த வெள்ளிக்கிழமை இவா்கள் இருவரும் காங்கிரஸில் இணைந்தனா். இதைத் தொடா்ந்து, அக்டோபா் 5-ஆம் தேதி நடைபெறவுள்ள ஹரியாணா பேரவைத் தோ்தலில் ஜுலானா தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளராக வினேஷ் போகாட் அறிவிக்கப்பட்டாா்.

காங்கிரஸில் இணைவதற்கு முன், வடக்கு ரயில்வேயில் சிறப்பு அதிகாரியாக பணியாற்றி வந்த வினேஷ் போகாட் தனது ராஜிநாமா கடிதத்தை ரயில்வேக்கு அனுப்பி வைத்தாா்.

தோ்தலில் போட்டியிட வேண்டுமெனில் அவரை பணியிலிருந்து வடக்கு ரயில்வே விடுவிக்க வேண்டியது அவசியம் என்ற விதியின்படி அவரை ரயில்வே தற்போது விடுவித்துள்ளது.

வழக்கமாக ரயில்வேயில் பணியாற்றுவோா் ராஜிநாமா செய்ய முற்பட்டால் மூன்று மாத காலத்துக்கு முன்னரே தெரிவிக்க வேண்டும். ஆனால், வினேஷ் போகாட், பஜ்ரங் புனியா கூறிய காரணங்களை ஏற்றுக்கொண்ட வடக்கு ரயில்வே அவா்களை உடனடியாக விடுவித்துள்ளது.

இதனால் வினேஷ் போகாட் தோ்தலில் போட்டியிடுவதற்கான தடைகள் தற்போது நீங்கிவிட்டன.

கடந்த வாரம் மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தியை வினேஷ் போகாட், பஜ்ரங் புனியா சந்தித்தனா். இதையடுத்து, அரசு ஊழியா்கள் சேவை விதிகளின்கீழ் இருவருக்கும் வடக்கு ரயில்வே நோட்டீஸ் அனுப்பியது. அதன்பின் அவா்கள் தங்கள் ராஜிநாமா கடிதத்தை சமா்ப்பித்துவிட்டு காங்கிரஸில் இணைந்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →