இந்தியா

பேருந்தில் பயணிகள் முன்னிலையில் இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை -இளைஞர் கைது

பேருந்தில் இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை: சக பயணி கைது

DIN

பேருந்தில் அலுவலகத்துக்கு சென்று கொண்டிருந்த இளம்பெண் ஒருவருக்கு அதே பேருந்தில் இருந்த பயணி ஒருவர் பாலியல் தொல்லை அளித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொல்கத்தாவின் கஸ்பா பகுதியில் இன்று(செப். 10) காலை 9.30 மணியளவில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. சம்பவம் நிகழ்ந்த பேருந்தில் இருந்த 20 வயது மதிக்கத்தக்க இளம்பெண்ணிடம் அந்த நபர் பாலியல் ரீதியாக தொந்தரவு அளித்ததாக சொல்லப்படுகிறது.

இதை சற்றும் எதிர்பார்க்காத அந்த பெண்மணி, அலறி கூச்சலிட்டுள்ளார். இதையடுத்து கண் சிமிட்டும் நேரத்தில் பேருந்திலிருந்து வெளியே சாடிய அந்த நபர் தப்பியோட முயற்சித்துள்ளார்.

எனினும், பேருந்திலிருந்த பயணிகளும் சாலையில் இருந்த மக்களும் அந்த நபரை மடக்கிப் பிடித்து தர்ம அடி கொடுத்துள்ளனர். அதில் காயமடைந்த நபரை அதன்பின்,கஸ்பா காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

அங்கு பாதிக்கப்பட்ட பெண் அளித்துள்ள புகாரின் அடிப்படையில், காவல்துறையினர் அந்த நபர்ரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது!

ஆஷஸ் தொடரை வென்ற (4-1) ஆஸி..! கொண்டாட்டத்தில் கலந்துகொண்ட ரசிகர்கள்!

யஷ் பிறந்த நாள்: சிறப்பு போஸ்டர் வெளியீடு!

பொங்கல் பரிசுத் தொகுப்பு: முதல்வர் ஸ்டாலின் தொடக்கி வைத்தார்!

ஓட்டை, உடைசல் சீர்ப்படுத்தும் கடைகளுக்கான வரம்புச் சட்டங்கள் - 1

SCROLL FOR NEXT