FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

சித்தூரில் அரசுப் பேருந்து-லாரி நேருக்கு நேர் மோதல்: 8 பேர் பலி

சித்தூரில் அரசு பேருந்தும், லாரியும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 8 பேர் பலியானார்கள்.

Updated On : 13 செப்டம்பர் 2024, 5:28 pm IST
நன்றி- படங்கள் V Chandramouli x வலைத்தளம்.
பகிர்:

சித்தூரில் அரசுப் பேருந்தும், லாரியும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 8 பேர் பலியானார்கள்.

ஆந்திர மாநிலம், சித்தூர்-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் அரசுப் பேருந்தும், லாரியும் வெள்ளிக்கிழமை பிற்பகல் நேருக்கு நேர் மோதியது. இந்த விபத்தில் 8 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். 30க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

உடனடியாக அவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Advertisement

Advertisement

விபத்தைத் தொடர்ந்து அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விபத்துக்குள்ளான வாகனங்களை அப்புறப்படுத்தும் பணியில் தீயணைப்புத் துறை வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.

பலர் படுகாயம் அடைந்திருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் விபத்து தொடர்பாக காவல்துறையினரும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments