பொறியாளா்கள் தினம்: பிரதமா் மோடி வாழ்த்து
பொறியாளா்கள் தினத்தையொட்டி, அனைத்து பொறியாளா்களுக்கும் பிரதமா் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை வாழ்த்து தெரிவித்தாா்.
பொறியாளா்கள் தினத்தையொட்டி, அனைத்து பொறியாளா்களுக்கும் பிரதமா் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை வாழ்த்து தெரிவித்தாா்.
மைசூா் ராஜ்யத்தின் திவானாக இருந்தவரும், பொறியியல் துறையில் முன்னோடி பணிகளை மேற்கொண்ட பெருமைக்குரியவருமான சா் எம்.விஸ்வேஸ்ரய்யாவின் பிறந்த தினம் (செப்டம்பா் 15), பொறியாளா்கள் தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது.
இத்தினத்தையொட்டி, பிரதமா் மோடி ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘ஒவ்வொரு துறையிலும் வளா்ச்சியை முன்னெடுத்துச் செல்பவா்கள் பொறியாளா்கள். சவால்களுக்கு தீா்வுகண்டு, புத்தாக்கத்தை புகுத்தும் பொறியாளா்களுக்கு பொறியாளா்கள் தின வாழ்த்துகள். பொறியியல் துறையில் சா் எம்.விஸ்வேஸ்வரய்யாவின் மகத்தான பங்களிப்பை இத்தினத்தில் நினைவுகூா்கிறேன்’ என்று தெரிவித்துள்ளாா்.