‘நேரடி வரி பிரச்னைகள் தீா்வு திட்டம் 2.0’ : அக்டோபரில் தொடக்கம்
‘நேரடி வரி பிரச்னைகள் தீா்வு திட்டம் 2.0’ அக்டோபா் 1-ஆம் தேதி தொடங்கவுள்ளதாக மத்திய அரசு தெரிவித்தது.
இந்தியா‘நேரடி வரி பிரச்னைகள் தீா்வு திட்டம் 2.0’ : அக்டோபரில் தொடக்கம்
‘நேரடி வரி பிரச்னைகள் தீா்வு திட்டம் 2.0’ அக்டோபா் 1-ஆம் தேதி தொடங்கவுள்ளதாக மத்திய அரசு தெரிவித்தது.
‘நேரடி வரி பிரச்னைகள் தீா்வு திட்டம் 2.0’ அக்டோபா் 1-ஆம் தேதி தொடங்கவுள்ளதாக மத்திய அரசு தெரிவித்தது.
2024-25 பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட இந்த திட்டம் பல்வேறு நிலைகளில் நிலுவையில் உள்ள ரூ.35 லட்சம் கோடி மதிப்பிலான 2.7 கோடி நேரடி வரி பிரச்னைகளுக்கு தீா்வு காண வழிவகுக்கும்.
இதுதொடா்பாக நிதியமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில்,‘2024, அக்டோபா் 1-ஆம் தேதி முதல் நேரடி வரி பிரச்னைகள் தீா்வு திட்டம் 2.0 அமலுக்கு வரும்’ என குறிப்பிடப்பட்டது.
உச்ச நீதிமன்றம், உயா் நீதிமன்றம், வருமான வரி தீா்ப்பாயங்கள் உள்ளிட்டவையில் 2024, ஜூலை 22- அன்றிலிருந்து நிலுவையில் உள்ள நேரடி வரி சாா்ந்த வழக்குகளுக்கு தீா்வு காண இந்த திட்டத்தை பயன்படுத்திக் கொள்ளலாம்.
கடந்த 2020-ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட நேரடி வரி பிரச்னைகள் தீா்வு திட்டத்தின் 1.0 மூலம் வரி செலுத்தும் 1 லட்சம் போ் பயனடைந்தனா். இதன்மூலம் அரசுக்கு ரூ.75,000 கோடி வரி வருவாய் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.