பாஜக தலைவர் தினகரன் 
இந்தியா

இந்து மதச் சடங்குகள் பற்றி அறியாதவர் ஜெகன்மோகன்: பாஜக தலைவர் குற்றச்சாட்டு!

ஆட்சி மற்றும் சமூகத்தில் உள்ள அமைப்புகளைப் பற்றிய அறிவு ரெட்டிக்கு கிடையாது.

பிடிஐ

இந்து மதச் சடங்குகள், மரபுகள், பழக்கவழக்கங்கள் பற்றி அறியாதவர் ஜெகன்மோகன் ரெட்டி என்று பாஜக தலைவர் எல். தினகரன் குற்றம் சாட்டியுள்ளார்.

கடந்த ஜூலை மாதம் திருமலைக்கு விநியோகிக்கப்பட்ட நெய்யில் விலங்குகளின் கொழுப்பு கலந்திருப்பதாக ஆய்வுக்கூடத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. ஜூலை 23-ம் தேதி லட்டு சுவையில் மாற்றம் இருப்பதாகப் புகார் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து நடத்தப்பட்ட ஆய்வில், தேங்காய் எண்ணெய், பருத்திக் கொட்டை, பலாக்கொட்டையிலிருந்து எடுக்கப்பட்ட எண்ணெய்கள்கூட கலந்திருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து லட்டு விவகாரம் தொடர்பாக ஆந்திரத்தில் புதிய சர்ச்சை நிலவிவரும் நிலையில், பாஜக தலைவர் தினகரன் வெளியிட்ட செய்திக்குறிப்பில்,

பொது கஜானாவைக் கொள்ளையடிப்பது, இந்து மதச் சடங்குகள், மரபுகள் மற்றும் பழக்க வழக்கங்களுக்குக் களங்கம் விளைவிப்பதைத் தவிர, ஆட்சி மற்றும் சமூகத்தில் உள்ள அமைப்புகளைப் பற்றிய அறிவு ரெட்டிக்கு கிடையாது.

லட்டுகளில் கலப்படம் செய்யப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுக்குப் பதில் அளிப்பதற்குப் பதிலாக, முன்னாள் முதல்வர் பாஜக தலைவர்களை அரைகுறை அறிவு உள்ளவர்கள் என்று கூறிவருகிறார் என்று அவர் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐ-க்கு மாற்றக் கோரிய மனு விசாரணை ஒத்திவைப்பு

ஊக்குவிப்பு திட்டங்களை செயல்படுத்த வேண்டும்: அன்புமணி

ஆவணங்கள் இல்லாததால் 14 ஆயிரம் கிலோ நெல் விதைகள் விற்கத் தடை

ஜவ்வாது மலை மக்களுக்கு அரசின் திட்டங்கள் சென்று சேர கூடுதல் கவனம்: மாவட்ட ஆட்சியா் க.தா்பகராஜ்

காவல் நிலையத்தை முற்றுகையிட்டு சட்டக் கல்லூரி மாணவா்கள் போராட்டம்

SCROLL FOR NEXT