பொக்ரானில் பயிற்சியின் போது மோட்டார் குண்டு வெடித்ததில் 4 வீரர்கள் காயம்
பொக்ரானில் போர் பயிற்சியின் போது மோட்டார் குண்டு வெடித்ததில் 4 வீரர்கள் காயமடைந்தனர்.
பொக்ரானில் போர் பயிற்சியின் போது மோட்டார் குண்டு வெடித்ததில் 4 வீரர்கள் காயமடைந்தனர்.
இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் உள்ள ஜெய்சல்மர் மாவட்டத்தில் உள்ள பொக்ரான் துப்பாக்கி சூடு தளத்தில் கடந்த சில நாட்களாக போர் பயிற்சிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் வெள்ளிக்கிழமை பிற்பகல் பயிற்சியின் போது மோட்டார் குண்டு தவறுதலாக வெடித்தது.
செஸ் ஒலிம்பியாட்: கடந்தமுறை தங்கம் வென்ற அணியுடன் டிரா செய்த இந்தியா!
இந்த சம்பவத்தில் எல்லைப் பாதுகாப்புப் படையைச் (பிஎஸ்எஃப்) சேர்ந்த 4 வீரர்கள் காயமடைந்தனர். விபத்தில் காயமடைந்த வீரர்கள் உதய், சுவிமல், ராகுல் குமார் மற்றும் அபிஷேக் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். உடனடியாக அவர்கள் பொக்ரான் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
Advertisement
Advertisement
பின்னர் மேல் சிகிச்சைக்காக ஜோத்பூருக்கு மாற்றப்பட்டுள்ளனர். அதில் உதய் மற்றும் அபிஷேக்கின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே பிஎஸ்எஃப் கமாண்டன்ட் அதிகாரி ரன்வீர் சிங் மருத்துவமனைக்குச் சென்று காயமடைந்த வீரர்களைப் பார்வையிட்டு விபத்து குறித்த தகவல்களைச் சேகரித்தார்.
மேலும் விபத்துக்கான காரணத்தை பிஎஸ்எஃப் அதிகாரிகளும் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.