FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

பங்குச் சந்தை உயர்வு: 90% சிறு முதலீட்டாளர்களுக்கு இழப்பு - ராகுல்

பங்குச் சந்தை வணிகம் தொடர்ந்து உயர்ந்து வருவது குறித்து ராகுல் காந்தி எச்சரிக்கை...

Updated On : 24 செப்டம்பர் 2024, 7:12 pm IST
ராகுல் காந்தி - கோப்புப் படம்
பகிர்:

பங்குச் சந்தை வணிகம் தொடர்ந்து உயர்ந்துவரும் நிலையில், கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் சிறுமுதலீட்டாளர்கள் ரூ.1.8 லட்சம் கோடியை இழந்துள்ளதாக காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

பங்குச் சந்தை வணிகத்தில் மும்பை பங்குச்சந்தையான சென்செக்ஸ் இன்று உச்சத்தை எட்டி பின்னர் சரிந்தது. இதேபோன்று தேசிய பங்குச்சந்தையான நிஃப்டியும் இதுவரை இல்லாத அளவுக்கு உயர்ந்தது.

கடந்த இரு நாள்களுக்கு முன்பும் புதிய உச்சத்தை செக்செக்ஸ் பதிவு செய்திருந்தது. கடந்த 4 நாள்களுக்கு முன்பு 84000 புள்ளிகளைக் கடந்தது சென்செக்ஸ்.

Advertisement

Advertisement

செப்டம்பர் 12ஆம் தேதி 83000 புள்ளிகளைக் கடந்தது. இதற்கு முன்பு ஆக. 1ஆம் தேதி 82,000 புள்ளிகளைத் தொட்டது. ஜூலை 18ஆம் தேதி 81,000 புள்ளிகளைக் கடந்தது.

கடந்த 12 வாரங்களில் மட்டும் சென்செக்ஸ் 80,000 புள்ளிகளில் இருந்து 85,000 புள்ளிகளைத் தொட்டுள்ளது. தேசிய பங்குச்சந்தையான நிஃப்டி இன்று 26,011 புள்ளிகள் என்ற புதிய உச்சத்தைப் பதிவு செய்தது.

புதிய உச்சத்துக்குப் பிறகு சரிவுடன் முடிந்த சென்செக்ஸ்!

90% சிறு முதலீட்டாளர்களுக்கு இழப்பு

இந்நிலையில் இது குறித்து தனது எக்ஸ் தளப் பக்கத்தில் ராகுல் காந்தி பதிவிட்டுள்ளதாவது,

பங்குகளில் விலையை முன்பே தீர்மானித்து செய்யப்படும் கட்டுப்பாடற்ற வணிகமானது, 5 ஆண்டுகளில் 45 மடங்கு வளர்ச்சியடைந்துள்ளது.

90% சிறு முதலீட்டாளர்கள் 3 ஆண்டுகளில் ரூ.1.8 லட்சம் கோடியை இழந்துள்ளனர்.

வணிகத்தில் பெரிய புள்ளிகளை உருவாக்குபவர்கள் என அழைக்கப்படுபவர்களின் பெயர்களை செபி வெளியிட வேண்டும் என ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments