முகப்பு
இந்தியா

கர்நாடக முதல்வர் ராஜிநாமா செய்யக்கோரி பாஜக எம்எல்ஏக்கள் ஆர்ப்பாட்டம்

கர்நாடக முதல்வா் சித்தராமையா ராஜிநாமா செய்யக்கோரி பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Updated On : 26 செப்டம்பர், 2024 at 7:02 AM
பகிர்:

கர்நாடக முதல்வா் சித்தராமையா ராஜிநாமா செய்யக்கோரி பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

முடா நில முறைகேடு வழக்கில் கர்நாடக முதல்வர் சித்தராமையா மீது வழக்குப்பதிவு செய்ய ஆளுநர் ஒப்புதல் வழங்கினார். இதை எதிர்த்து கர்நாடக உயர்நீதிமன்றத்தில் சித்தராமையா மனு அளித்தார்.

வழக்கின் விசாரணையில் சித்தராமையா மீது நடவடிக்கை எடுக்கத் தடை இல்லை என்று நீதிபதி நாக பிரசன்னா உத்தரவிட்டு சித்தராமையாவின் மனுவை தள்ளுபடி செய்தார்.

இதையடுத்து சித்தராமையா ராஜிநாமா செய்ய வேண்டும் என பாஜகவினர் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.

கடந்த இரு நாள்களாக பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், நேற்று பெங்களூருவில் சித்தராமையா வீட்டின் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினரை காவல்துறையினர் கைது செய்தனர்.

தொடர்ந்து நேற்று எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் வழக்கு குறித்து விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம், சித்தராமையா மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்டுள்ளது.

இதையடுத்து இன்று சட்டப்பேரவை வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பாக பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் அசோகா, சட்ட மேலவை தலைவர் நாராயணசாமி முன்னிலையில் பாஜக எம்எல்ஏக்கள், எம்எல்சிக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.

சித்தராமையா உடனடியாக தனது பதவியை ராஜிநாமா செய்ய வேண்டும் என்று கையில் பதாகைகளுடன் கோஷமிட்டு வருகின்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →