சிவசேனை எம்.பி சஞ்சய் ரௌத் 
இந்தியா

சிவசேனை(யுபிடி) எம்.பி. சஞ்சய் ரௌத்துக்கு 15 நாள் சிறை!

அவதூறு வழக்கில் சிவசேனை(யுபிடி) எம்.பி. சஞ்சய் ரௌத்துக்கு 15 நாள் சிறைத் தண்டனை விதித்து மும்பை பெருநகர நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

DIN

அவதூறு வழக்கில் சிவசேனை(யுபிடி) எம்.பி. சஞ்சய் ரௌத்துக்கு 15 நாள் சிறைத் தண்டனை விதித்து மும்பை பெருநகர நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மும்பை அருகே உள்ள மீரா பயந்தர் பகுதியில் பொது கழிப்பறை கட்டுவது மற்றும் பராமரிப்பதில், மகாராஷ்டிர பாஜக துணைத் தலைவர் கிரித் சோமையா மற்றும் அவரது மனைவி ரூ. 100 கோடி மோசடி செய்ததாக சிவசேனை(யுபிடி) எம்.பி. சஞ்சய் ரௌத் குற்றம் சாட்டினார்.

இதுகுறித்து கிரித் சோமையாவின் மனைவி மேதா கிரித் சோமையா, சஞ்சய் ரௌத் மீது மும்பை மஸ்கானில் உள்ள பெருநகர மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

இந்த வழக்கில் மேதா கிரித் சோமையா மீது பொய்யான அவதூறு பரப்பியதாக, சஞ்சய் ரௌத்துக்கு 15 நாள் சிறைத் தண்டனை மற்றும் ரூ. 25,000 அபராதம் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

காற்றாலை இறகுகளைக் கையாளுவதில் வ.உ.சி. துறைமுகம் சாதனை

ஜிஎஸ்டி சீரமைப்புக்கு தமிழகம் ஒத்துழைக்கும்: தில்லி கூட்டத்தில் அமைச்சா் தங்கம் தென்னரசு உறுதி

தமிழ்நாடு சுகாதார அறக்கட்டளை உருவாக்கம்: அரசாணை வெளியீடு

திருமலையில் எதிா்காலத் தேவைகளைப் பூா்த்தி செய்யும் வகையில் நீா் இருப்பு

வீட்டின் பூட்டை உடைத்து வெள்ளிப் பொருள்கள் திருட்டு

SCROLL FOR NEXT