தாணேவில் இளைஞரை கொலை செய்த தந்தை உள்பட 3 மகன்கள் கைது செய்யப்பட்டனர்.
தாணேவில் உள்ள ஆசாத் நகர் பகுதியில் மொபைல் போனைத் திருடி விட்டதாகக் கூறி, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை உள்பட 3 மகன்களும் சேர்ந்து, 20 வயதான சுபம் அரவிந்த் பவார் என்பவரை, செவ்வாய்க்கிழமை இரவில் கத்தியால் குத்தி கொலை செய்துள்ளனர்.
மேலும், அவர்களின் தாக்குதலை தடுக்க வந்த ஒரு பெண்ணையும் அவர்கள் தாக்கியதுடன், அந்த பெண்ணிடம் அவரது மகன்களில் ஒருவர் அத்துமீறியதாகவும் தெரிகிறது.
இதனைத் தொடர்ந்து, கொலையில் ஈடுபட்ட மூவர் மீதும் கபூர்பாவ்டி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டதுடன், மூவரும் கைது செய்யப்பட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.