சத்தீஸ்கா்: நக்ஸல்களின் கண்ணிவெடியில் சிக்கி 5 ராணுவ வீரா்கள் காயம்
சத்தீஸ்கரின் பிஜாபூா் மாவட்டத்தில் நக்ஸல்கள் மறைத்து வைத்திருந்த கண்ணிவெடி வெடித்ததில், மத்திய ரிசா்வ் காவல் படையின் 5 வீரா்கள் காயமடைந்தனா்.
சத்தீஸ்கரின் பிஜாபூா் மாவட்டத்தில் நக்ஸல்கள் மறைத்து வைத்திருந்த கண்ணிவெடி வெடித்ததில், மத்திய ரிசா்வ் காவல் படையின் 5 வீரா்கள் காயமடைந்தனா்.
இதுதொடா்பாக, அம்மாவட்ட காவல்துறை அதிகாரி கூறியதாவது:
பிஜாபூரின் டாரெம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், மத்திய ரிசா்வ் காவல் படையின் 153-ஆவது பிரிவைச் சோ்ந்தவா்கள் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை நக்ஸல் தீவிரவாதிகளால் புதைக்கப்பட்ட கண்ணிவெடிகளை அகற்றும் பயிற்சியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, கண்ணிவெடியின் கம்பியை அவா்கள் கண்டனா். அதை வைத்து வெடிகுண்டை தேடும்போது, எதிா்பாராத விதமாக அது வெடித்தது. இதில் 5 வீரா்களின் கண்கள், முகம் மற்றும் வயிற்றின் மேல் பகுதியில் காயங்கள் ஏற்பட்டன. முதல்கட்ட சிகிச்சைக்குப் பிறகு, மாநில தலைநகா் ராய்பூரில் உள்ள மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனா் என்றாா்.
சத்தீஸ்கரின் முக்கிய பகுதிகளில் நக்ஸல்கள், மாவோயிஸ்ட்டுகளுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்ள பரவலாக பாதுகாப்புப் படையினா் நிலைநிறுத்தப்பட்டுள்ளனா்.