முகப்பு
இந்தியா

பஞ்சாப், ஹரியாணாவில் கடும் குளிர்: மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

பஞ்சாப் மற்றும் ஹரியாணாவில் பெரும்பாலான பகுதிகளில் குளிர்ந்த காலநிலை தொடர்ந்து நீடித்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. 

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 12:17 PM
பஞ்சாப், ஹரியாணாவில் கடும் குளிர்: மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
பகிர்:

பஞ்சாப் மற்றும் ஹரியாணாவில் பெரும்பாலான பகுதிகளில் குளிர்ந்த காலநிலை தொடர்ந்து நீடித்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. 

பஞ்சாபின் மற்ற இடங்களான அமிர்தசரஸ் 5.5 டிகிரி செல்சியஸாகவும், லூதியானா மற்றும் பாட்டியாலாவில் குறைந்தபட்ச வெப்பநிலை 6.9 மற்றும் 5.6 டிகிரியாகவும் உள்ளது. இது இயல்பை  விட 3 டிகிரி செல்சியஸ் குறைவாகும். 

பதிண்டா, ஃபரித்கோட் மற்றும் குர்தாஸ்பூரில் முறையே 3, 3.5 மற்றும் 4 டிகிரி செல்சியஸ் குளிர் காலநிலை நிலவுகிறது. அண்டை மாநிலமான ஹரியாணாவில், அம்பாலாவில் குறைந்தபட்ச வெப்பநிலை 7.9 டிகிரி செல்சியஸைப் பதிவாகியுள்ளது. அதே நேரத்தில் ஹிசாரில் குறைந்தபட்ச வெப்பநிலை 5.9 டிகிரி செல்சியஸ் ஆகும், இது இயல்பை விட இரண்டு டிகிரி குறைவாக இருந்தது.

Advertisement

கர்னாலின் குறைந்தபட்ச வெப்பநிலை 4.2 டிகிரி செல்சியஸ், இயல்பை விட 4 டிகிரி குறைவாகும், நர்னால் மற்றும் ரோஹ்தக் முறையே 9 மற்றும் 6.8 டிகிரி செல்சியஸ் ஆக இருந்தது.

பஞ்சாப் மற்றும் ஹரியாணாவின் கூட்டுத் தலைநகரான சண்டீகரில் குறைந்தபட்சமாக 7.5 டிகிரி செல்சியஸ், இயல்பை விட 2 டிகிரி குறைவாகப் பதிவாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.