பாலியல் வன்கொடுமை 
இந்தியா

புற்றுநோயால் அவதியுறும் 13 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை!

கொடூரத்தின் உச்சம்... புற்றுநோயால் அவதியுறும் 13 வயது சிறுமி கர்ப்பம்!

DIN

புற்றுநோயால் அவதியுறும் 13 வயது சிறுமியொருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட கொடூரம் மகாராஷ்டிரத்தில் நிகழ்ந்துள்ளது.

பாதிக்கப்பட்டுள்ள சிறுமி மகாராஷ்டிரத்தின் தாணே மாவட்டத்தில் உள்ள தமது வீட்டில் தனியாக இருந்தபோது இந்த கொடுமை நிகழ்ந்துள்ளது. இந்த வழக்கில் 29 வயது நபர் ஒருவர் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள நிலையில், பிகார் மாநிலத்தில் பதுங்கியிருந்த அவர் காவல் துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மும்பையிலுள்ள ஒரு மருத்துவமனையில் கீமோதெரபி சிகிச்சை பெறும் அந்த சிறுமிக்கு தேவையான உதவிகளை, மேற்கண்ட குற்றஞ்சாட்டப்பட்டுள்ள நபரின் குடும்பம் செய்து கொடுத்து உதவியாக இருந்து வந்துள்ளனர். அந்த நபரின் குடும்பத்தாரும் பிகாரிலுள்ள சிறுமியின் பூர்வீக கிராமத்தைச் சேர்ந்தோராவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், மருத்துவமனைக்குச் சென்றிருந்த மாணவிக்கு புற்றுநோய் சிகிச்சைக்கான வழக்கமான பரிசோதனையின்போது, அவர் கர்ப்பமடைந்திருப்பது தெரிய வந்துள்ளது. இதையடுத்து நடத்தப்பட்ட விசாரணையில் அந்த சிறுமி நடந்த விஷயத்தை அனைவரிடமும் தெரிவித்துள்ளார்.

இதனைத்தொடர்ந்து காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ள நிலையில், இது தொடர்பாக போக்சோ வழக்குப்பதிந்துள்ள காவல் துறையினர் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள நபரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாமக சாா்பில் போட்டியிட மத்திய மாவட்டச் செயலாளா் விருப்ப மனு

கணினி துறையில் குவாண்டம் தொழில்நுட்பம் வியக்கத்தக்க வளா்ச்சியை ஏற்படுத்தும்: நோபல் விருதாளா் மெளங்கி ஜி.பாவெண்டி

காஞ்சிபுரம் கோயில்களில் அனுமன் ஜெயந்தி விழா

நாமக்கல் நரசிம்மா் கோயிலில் இன்று தமிழிசை விழா

கிரிக்கெட் வீரா் யுவராஜ் சிங், நடிகா் சோனு சூட் சொத்துகள் முடக்கம்: சூதாட்ட செயலி வழக்கில் அமலாக்கத் துறை நடவடிக்கை

SCROLL FOR NEXT