தில்லியில் கட்டட விபத்து நடந்த இடத்தில் மீட்புப்பணி... 
இந்தியா

தில்லியில் கட்டடம் இடிந்து விழுந்ததில் 4 பேர் பலி! மேலும் சிலரைத் தேடும் பணி தீவிரம்!!

தில்லியின் முஸ்தபாஃபாத்தில் கட்டடம் ஒன்று இடிந்து விழுந்து விபத்து...

DIN

தில்லியின் முஸ்தபாஃபாத்தில் குடியிருப்புக் கட்டடம் ஒன்று இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் 4 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 8-10 பேரைத் தேடும் பணி நடைபெற்று வருகிறது.

வடகிழக்கு தில்லியில் முஸ்தபாஃபாத்தில் குடியிருப்புக் கட்டடம் ஒன்று இன்று(சனிக்கிழமை) அதிகாலை 3 மணியளவில் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது.

தகவலறிந்தவுடன் தேசிய பேரிடர் மீட்புப் படை, தில்லி காவல்துறை மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்புப் பணிகளை மேற்கொண்டுள்ளனர்.

தற்போதுவரை 14 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். இந்த விபத்தில் 4 பேர் பலியாகினர்.

மேலும் 8 முதல் 10 பேர் இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. அவர்களைத் தேடும் பணியில் மீட்புக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.

நேற்று(வெள்ளிக்கிழமை) இரவு தில்லியில் பலத்த மழை பெய்ததால் கட்டடம் வலுவிழந்து இடிந்து விழுந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. காவல்துறையினர் இதுகுறித்து விசாரித்து வருகின்றனர்.

தில்லி முதல்வர் ரேகா குப்தா, விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்ததுடன் மீட்புப்பணி, காயமடைந்தவர்களுக்கு உதவி என தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். மேலும் விசாரணையைத் தொடங்குமாறும் காவல்துறையை வலியுறுத்தியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

காந்தாரா சாப்டர் 1 வசூல் வேட்டை! 11 நாள்கள் விவரம்...

மேட்டூர் அணை நீர் நிலவரம்!

ஹரியாணா ஐஜி தற்கொலை: டிஜிபி-க்கு கட்டாய விடுப்பு!

அடுத்த 2 மணிநேரம் சென்னை, 12 மாவட்டங்களில் மழை!

லாபம் உண்டாகும் இந்த ராசிக்கு!

SCROLL FOR NEXT