முகப்பு
இந்தியா

உச்சநீதிமன்றம் சொல்வதே இறுதியானது: மத்திய அரசுக்கு காங்கிரஸ் கண்டனம்

மத்திய அரசு என்ன தீர்மானித்தாலும் உச்சநீதிமன்றமே இறுதி முடிவை எடுக்கும் - காங்கிரஸ்

Updated On : 19 ஏப்ரல் 2025, 10:30 pm IST
உச்சநீதிமன்றம்
பகிர்:

எந்தவொரு விவகாரத்திலும் இறுதி முடிவை எடுக்கும் அதிகாரம் உச்சநீதிமன்றத்துக்கே இருக்கிறது என்று காங்கிரஸ் தலைவர் சல்மான் குர்ஷித் தெரிவித்துள்ளார்.

உச்சநீதிமன்றம் மத மோதலை ஊக்குவிக்கிறது என்று கடுமையான சொற்களால் உச்சநீதிமன்றத்தை விமர்சித்துள்ளார் பாஜக எம்.பி. நிஷிகாந்த் துபே.

பாஜக தலைவரது மேற்கண்ட கருத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ள காங்கிரஸ் தலைவர் சல்மான் குர்ஷித் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் இன்று(ஏப். 19) பேசியிருப்பதாவது: “உச்சநீதிமன்றத்தையோ அல்லது எந்தவொரு நீதிமன்றத்தையோ எதிர்த்து ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் கேள்வி எழுப்புவது கவலைக்குரிய விஷயமாகும்.

Advertisement

Advertisement

நமது சட்ட அமைப்பில், இறுதி முடிவை எடுக்கும் அதிகாரம் அரசின் கையில் இல்லை; உச்சநீதிமன்றத்திடமே அந்த அதிகாரம் இருக்கிறது. இதையொருவர் புரிந்துகொள்ளாமல் பேசுவது வருத்தத்தை தருகிறது” என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments