PTI
இந்தியா

இந்தியாவுடன் போர்? சிம்லா ஒப்பந்தத்தை நிறுத்திய பாகிஸ்தான்!

சிம்லா ஒப்பந்தத்தை பாகிஸ்தான் நிறுத்தி வைத்தது.

DIN

சிந்து நதி ஒப்பந்தத்தை இந்தியா ரத்து செய்த நிலையில், பதில் நடவடிக்கையாக சிம்லா ஒப்பந்தத்தை பாகிஸ்தான் ரத்து செய்துள்ளது.

சிம்லா நதி ஒப்பந்தத்தை ரத்து செய்வதாக அறிவித்த பாகிஸ்தான், இதனைப் போராகக் கருதுவதாகத் தெரிவித்துள்ளது.

1971 ஆம் ஆண்டில் ஏற்பட்ட போரை நிறுத்தும்வகையில், 1972-ல் சிம்லா ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

சிம்லா ஒப்பந்தத்தின்படி, முக்கிய அம்சங்களாக, இருநாடுகளும் தங்கள் நாட்டுப் போர்க்கைதிகளை அமைதியான முறையில் விடுவிக்க வேண்டும். இரு நாடுகளின் எல்லைகளை அமைதியான முறையில், பேச்சுவார்த்தை மூலம் தீர்மானிக்க வேண்டும்; எல்லைப் பிரச்னைகளையும் அமைதியான முறையில் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க வேண்டும்.

பெஹல்காம் தாக்குதலையடுத்து, பாகிஸ்தானியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த விசாக்களை ரத்து செய்வதாக மத்திய அரசு அறிவித்தது. தொடர்ந்து, இந்தியாவிலுள்ள பாகிஸ்தானைச் சேர்ந்த பாதுகாப்பு, ராணுவம், விமானம், கடற்படை ஆலோசகர்கள் ஒருவாரத்துக்குள் வெளியேற உத்தரவிட்டுள்ளது.

இதனிடையே, இந்தியா மீது பாகிஸ்தானும் சில நடவடிக்கைகளை அறிவித்துள்ளது. பாகிஸ்தானின் வான்வெளியை இந்திய விமானங்கள் பயன்படுத்தத் தடை, இந்தியாவுடன் அனைத்து வகை வர்த்தங்களும் நிறுத்தம் முதலான நடவடிக்கைகளை அறிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

13 ஆண்டுகளுக்குப் பிறகு ஆக்‌ஷன் அல்லாத கதையில் டாம் குரூஸ்..! ஆஸ்கர் வென்ற இயக்குநருடன்!

125 புதிய மின்சாரப் பேருந்துகள் சேவையை தொடக்கிவைத்தார் உதயநிதி!

வார பலன்கள்: 12 ராசிகளுக்கும்!

மத்திய பட்ஜெட் - 2026 ஞாயிற்றுக்கிழமை தாக்கல் செய்யப்படுமா?

100 நாள் வேலைத் திட்டம் மாற்றம்: திமுக கூட்டணி மாபெரும் ஆர்ப்பாட்டம் அறிவிப்பு!

SCROLL FOR NEXT