முகப்பு
இந்தியா

மும்பை: அமலாக்கத்துறை கட்டடத்தில் பயங்கர தீ விபத்து!

அதிகாலையில் தீ விபத்து!

Updated On : 27 ஏப்ரல், 2025 at 4:02 AM
மும்பையில் அமலாக்கத்துறை அலுவலகத்தில் தீ விபத்து
பகிர்:

மும்பை: தெற்கு மும்பையின் பல்லார்ட் பையர் எஸ்டேட் பகுதியில் அமைந்துள்ள கைசெர்-ஐ-ஹிந்த் கட்டடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இன்று(ஏப். 27) அதிகாலை 3 மணியளவில் மேற்கண்ட கட்டடத்தில் தீப்பற்றி பிற பகுதிகளுக்கும் பரவியது.

தகவலறிந்து, சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத்துறையினர் தீயை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். தீயை கட்டுப்படுத்தும் பணியில் 12 தீயணைப்பு வாகனங்கள் ஈடுபட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த கட்டடத்தில் அமலாக்கத்துறை அலுவலகம் செயல்பட்டு வரும் நிலையில் முக்கிய ஆவணங்கள் பல தீயில் கருகி சேதமடைந்திருக்க வாய்ப்பு அதிகம் என்று அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

முழு கட்டுரையைப் படிக்க →