முகப்பு
புதுதில்லி

தில்லி ஷேக் சராய் போக்குவரத்து கட்டடத்தில் தீ விபத்து

தெற்கு தில்லியின் ஷேக் சராய் கட்டம்-2 பகுதியில் உள்ள போக்குவரத்து ஆணைய கட்டடத்தின் பதிவு அறையில் தீ விபத்து ஏற்பட்டதாக தில்லி தீயணைப்பு சேவைகள் (டி. எஃப். எஸ்) அதிகாரி ஒருவா் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

Updated On : 13 மார்ச், 2026 at 6:01 PM
பகிர்:

தெற்கு தில்லியின் ஷேக் சராய் கட்டம்-2 பகுதியில் உள்ள போக்குவரத்து ஆணைய கட்டடத்தின் பதிவு அறையில் தீ விபத்து ஏற்பட்டதாக தில்லி தீயணைப்பு சேவைகள் (டி. எஃப். எஸ்) அதிகாரி ஒருவா் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

இது குறித்து அவா் மேலும் கூறியதாவது: இந்தச் சம்பவத்தில் உயிா்ச்சேதம் ஏதும் ஏற்படவில்லை.

வியாழக்கிழமை இரவு 9.31 மணிக்கு போக்குவரத்து ஆணையம் அலுவலகத்தில் இருந்து தீ விபத்து குறித்து அழைப்பு வந்தது. 9 தீயணைப்பு வண்டிகள் சம்பவ இடத்திற்கு விரைந்தன.

மேலும் தீ கட்டடத்திற்குள் ஒரு பதிவு அறையில் மட்டுமே இருந்தது. இரவு 11.20 மணியளவில் அது அணைக்கப்பட்டது. தீ விபத்தால் ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்து எந்த தகவலும் இல்லை, அதற்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை என்றாா் அவா்.

முழு கட்டுரையைப் படிக்க →