முகப்பு
இந்தியா

பஹல்காம் தாக்குதல்: விசாரணையைத் தொடங்கிய என்ஐஏ!

பஹல்காம் தாக்குதல் தொடர்பாக என்ஐஏ விசாரணை தொடக்கம்.

Updated On : 27 ஏப்ரல், 2025 at 12:03 PM
கோப்புப்படம்
பகிர்:

ஜம்மு - காஷ்மீரில் பஹல்காம் பகுதியில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதல் வழக்கின் விசாரணை தேசிய புலனாய்வு முகமைக்கு (என்.ஐ.ஏ.) மாற்றப்பட்டதையடுத்து இன்று(ஏப். 27) என்ஐஏ விசாரணையை அதிகாரப்பூர்வமாக தொடங்கியுள்ளது.

ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில் உள்ள சுற்றுலாத் தலத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டனர். மேலும், 3 தமிழர்கள் உள்பட 17 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுதிக்கப்பட்டனர்.

இந்தச் சம்பவம் இந்தியா மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் கடும் அதிா்ச்சியை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

Advertisement

தாக்குதல் நடந்த இடத்தில் கடந்த புதன்கிழமை முதல் முகாமிட்டுள்ள என்.ஐ.ஏ. அதிகாரிகள் குழுக்கள், ஆதாரங்களைத் தேடும் பணியை தீவிரப்படுத்தியுள்ளன. நேரில் பார்த்த சாட்சிகளிடம் நுணுக்கமான விசாரணையை என்ஐஏ அதிகாரிகள் தொடங்கியுள்ளனர்.

ஜம்மு காஷ்மீர் காவல்துறையின் விசாரணைக்கு உதவியாக செயல்பட்ட தேசிய புலனாய்வு முகமை, முழுமையாக அந்த புலனாய்வை தன்வசம் எடுத்துக்கொள்ளத் தீா்மானித்தது.

ஒரு ஐ.ஜி., ஒரு டி.ஐ.ஜி, ஒரு எஸ்.பி. ஆகிய அதிகாரிகள் மேற்கண்ட என்ஐஏ விசாரணை நடவடிக்கைகள் மேற்பாா்வையிடப்பட்டு வருகின்றனர்.

பயங்கரவாதிகளின் செயல்பாடுகளைக் குறித்த தடயங்களை விசாரணை செய்யும் என்.ஐ.ஏ. குழுக்கள், மக்கள் நுழையும் மற்றும் வெளியேறும் பகுதிகளைக் கவனித்து வருகின்றன.

நாட்டை உலுக்கிய இந்தத் தாக்குதலில் ஈடுப்பட்டவர்களை கண்டறிவதற்காக, தடயவியல் மற்றும் பிற நிபுணர்களின் உதவியுடன் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.