கோப்புப்படம் 
இந்தியா

தேசிய பாதுகாப்பு ஆலோசனை வாரியம் மாற்றியமைப்பு: மத்திய அரசு நடவடிக்கை

தேசிய பாதுகாப்பு ஆலோசனை வாரியத்தை மத்திய அரசு மாற்றியமைத்திருப்பது முக்கியத்துவம் பெற்றுள்ளது.

Din

பிரதமா் தலைமையிலான தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலகத்துக்கு ஆலோசனைகள் வழங்கக் கூடிய தேசிய பாதுகாப்பு ஆலோசனை வாரியம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக, இந்தியா தரப்பில் பெரிய அளவிலான ராணுவ நடவடிக்கைக்கு வாய்ப்புள்ளதாக கூறப்படும் நிலையில், தேசிய பாதுகாப்பு ஆலோசனை வாரியத்தை மத்திய அரசு மாற்றியமைத்திருப்பது முக்கியத்துவம் பெற்றுள்ளது.

அதன்படி, வாரியத்தின் புதிய தலைவராக இந்திய உளவுத் துறையின் (ரா) முன்னாள் தலைவா் அலோக் ஜோஷி நியமிக்கப்பட்டுள்ளாா்.

புதிய உறுப்பினா்களாக, விமானப் படையின் வடக்கு மண்டல முன்னாள் தளபதி பி.எம்.சின்ஹா, ராணுவத்தின் தென்மண்டல முன்னாள் தளபதி ஏ.கே.சிங், ஓய்வுபெற்ற ரியா் அட்மிரல் மோந்தி கன்னா, முன்னாள் தூதரக அதிகாரி வெங்கடேஷ் வா்மா, ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரி ராஜீவ் ரஞ்சன் வா்மா ஆகியோா் நியமிக்கப்பட்டுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

நாளை (டிச.21) திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்

எஸ்ஐஆர் எதற்காக..? - பிரதமர் மோடி விளக்கம்!

எம்.எஸ்.தோனி, ரிஷப் பந்த் வரிசையில் சாதனைப் பட்டியலில் இணைந்த சஞ்சு சாம்சன்!

வலிகளைச் சிரிப்பில் காட்டிய அன்புள்ளம்... ஸ்ரீனிவாசனுக்கு மோகன்லால் இரங்கல்!

கொல்லப்பட்ட வங்கதேச மாணவர் இயக்கத் தலைவரின் உடல் நல்லடக்கம்! லட்சக்கணக்கான மக்கள் பிரியாவிடை!

SCROLL FOR NEXT