ஆட்டோவில் சென்ற ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு!
ஆந்திர முதல்வர் சந்திரபாபு அரசு நிகழ்வு ஒன்றில் பங்கேற்க ஆட்டோவில் சென்று அனைவரின் கவனத்தை ஈர்த்தார்.
ஆந்திர முதல்வர் சந்திரபாபு அரசு நிகழ்வு ஒன்றில் பங்கேற்க ஆட்டோவில் சென்று அனைவரின் கவனத்தை ஈர்த்தார்.
ஆந்திர மாநிலம், கடப்பாவில் அரசு சார்பில் ஓய்வூதியம் வழங்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்நிகழ்வில் பங்கேற்க ஹெலிகாப்டரில் வந்திறங்கிய ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, பின்னர் ஹெலிபேடு தளத்தில் இருந்து நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு ஆட்டோவில் சென்றார்.
Advertisement
Advertisement
ஆட்டோவில் பின்புற இருக்கையில் அமர்ந்து பயணித்த அவர், நிகழ்ச்சி நடைபெறும் இடத்தை அடைந்ததும் ஓட்டுநருக்கு அருகில் அமர்ந்து புகைப்படமும் எடுத்துக்கொண்டார்.
ஆகஸ்ட் 11 முதல் இபிஎஸ் 3ம் கட்ட சுற்றுப்பயணம்
தொடர்ந்து ஆட்டோவுக்கான பயணக் கட்டணத்தை கொடுத்த சந்திரபாபு நாயுடு நிகழ்ச்சியில் பங்கேற்க சென்றார்.
ஆந்திர முதல்வர் சந்திரபாபு ஆட்டோவில் வந்திறங்கியது நிகழ்ச்சியில் பங்கேற்றோர் மத்தியில் கவனம் பெற்றது.
Andhra Pradesh Chief Minister N Chandrababu Naidu on Friday arrived at a public meeting in an autorickshaw here, drawing attention for his choice of travel during a visit to distribute monthly welfare pensions.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.