மாநிலங்களவை  X
இந்தியா

எதிர்க்கட்சிகள் அமளி: மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்திவைப்பு!

எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியால் மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்திவைப்பு...

இணையதளச் செய்திப் பிரிவு

எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியால் நாடாளுமன்ற மாநிலங்களவை இன்று(வெள்ளிக்கிழமை) நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் கடந்த ஜூலை 21-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.

எதிர்க்கட்சிகளின் முக்கிய கோரிக்கையான ஆபரேஷன் சிந்தூர் குறித்து இந்த வாரத்தின் முதல் இரு நாள்கள் விவாதம் நடைபெற்றது. தொடர்ந்து பிகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக அவையில் விவாதிக்க வேண்டும் என்று கோரி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டும் போராட்டம் நடத்தியும் வருகின்றனர்.

இந்நிலையில் இன்று மாநிலங்களவையில் பிகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து விவாதிக்கக் கோரி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கோஷமிட்டனர். நண்பகல் 12 மணி வரை முதலில் ஒத்திவைக்கப்பட்ட நிலையில், மீண்டும் எதிர்கட்சியினரின் அமளியால் அவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

அதன்படி ஆகஸ்ட் 4 ஆம் தேதி(திங்கள்) காலை 11 மணிக்கு அவை செயல்பாடுகள் மீண்டும் துவங்கும் என அவைத் தலைவர் அறிவித்தார்.

Rajya Sabha proceedings have been adjourned until 11 AM on 4th August for Opposition uproar over Bihar's electoral rolls revision

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெங்களூரில் காரில் தனியாக பயணித்தால் வரி விதிப்பா?

பாகிஸ்தானில் அரசுக்கு எதிரான போராட்டத்தில் துப்பாக்கிச்சூடு: 12 பேர் பலி

திருடப்பட்ட 6 லட்சம் கைப்பேசிகள் மீட்பு; லட்சக்கணக்கான குடும்பங்களின் டிஜிட்டல் பாதுகாப்பும் மீட்டெடுப்பு!

கரூர் பலி: செந்தில் பாலாஜி விளக்கம் சந்தேகத்தை எழுப்புகிறது; அண்ணாமலை

9 மாநிலங்களுக்கு ரூ. 4,645.60 கோடி புனரமைப்புத் திட்ட நிதி - உயர்மட்டக் குழு ஒப்புதல்

SCROLL FOR NEXT