அமர்நாத் யாத்திரை PTI
இந்தியா

அமர்நாத் யாத்திரை செல்ல நாளைமுதல் அனுமதியில்லை! காஷ்மீர் நிர்வாகம் அறிவிப்பு

அமர்நாத் யாத்திரை திட்டமிடப்பட்ட ஒருவாரத்துக்கு முன்பே நிறுத்தம்! என்ன காரணம்?

இணையதளச் செய்திப் பிரிவு

ஸ்ரீநகர் : அமர்நாத் யாத்திரை திட்டமிடப்பட்ட ஒருவாரத்துக்கு முன்பே நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அமர்நாத் யாத்திரை செல்ல ரக்‌ஷா பந்தன் நாளான ஆகஸ்ட் 9-ஆம் தேதி வரை பக்தர்களுக்கு அனுமதியளிக்கப்பட்டிருந்தது. இந்தநிலையில், இந்த யாத்திரை முன்கூட்டியே முடிவடைகிறது.

காஷ்மீர் நிர்வாகம் அறிவித்துள்ளதன்படி, நாளைமுதல்(ஆக. 3) அமர்நாத் யாத்திரைக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, காஷ்மீர் கோட்ட ஆணையர் விஜய் குமார் பிதூரி இன்று(ஆக. 2) வெளியிட்டுள்ள அறிக்கையில்:

அண்மையில் பெய்துள்ள கனமழையால் மோசமான வானிலை நிலவுவதாகவும், இதனால் யாத்திரை பாதைகள் சேதமடைந்திருப்பதாகவும் அங்கு பராமரிப்பு பணிகள் மேர்கொள்ளப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமர்நாத் யாத்திரைக்கு வரையறுக்கப்பட்டுள்ள பால்டல், பஹல்காம் ஆகிய இரு வழித்தடங்களிலும் ஆக. 3 முதல் அதிக பணியாளர்கள் மற்றும் இயந்திரங்கள் உதவியுடன் பராமரிப்பு பணி மேற்கொள்ளப்படுவதால் இரு வழித்தடங்களிலும் அமர்நாத் யாத்திரை செல்ல பக்தர்களுக்கு தடை விதிக்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

The annual Amarnath Yatra in Kashmir closed a week before it was to end.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று மழை! நாளை முதல் தீவிரமடையும்!!

அக். 21 அன்று கோயம்பேடு மார்க்கெட் இயங்காது!

நாகூரில் தந்தையைக் கொன்ற மகன் கைது!

பைக்கில் சென்ற பெண்ணின் தங்கச் செயினைப் பறித்த ஆம்புலன்ஸ் ஓட்டுநர் கைது!

பேரவை வளாகத்தில் பாமக எம்எல்ஏக்கள் தர்னா!

SCROLL FOR NEXT