பிஜாப்பூரில் நடந்த என்கவுண்டரில் நக்சல் சுட்டுக் கொலை!
சத்தீஸ்கரில் பாதுகாப்புப் படையினருடன் மோதலில் நக்சலைட் உயிரிழப்பு..
சத்தீஸ்கரின் பிஜாப்பூர் மாவட்டத்தில் புதன்கிழமை பாதுகாப்புப் படையினருடன் நடந்த என்கவுண்டரில் நக்சலைட் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டதாக மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
நக்சலைட் எதிர்ப்பு நடவடிக்கையில் பாதுகாப்புப் படையினரின் கூட்டுக் குழு சென்றிருந்தபோது மாவட்டத்தின் மேற்குப் பகுதியில் மோதல் ஏற்பட்டதாகவும், அந்த மோதலில் நக்சல் ஒருவர் உயிரிழந்ததாக காவல்துறை ஆய்வாளர் சுந்தர்ராஜ் தெரிவித்தார்.
ஆயுதத்துடன் கூடிய ஒரு நக்சலைட்டின் உடல் சம்பவ இடத்திலிருந்து மீட்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்தில் தேடுதல் நடவடிக்கை நடைபெற்று வருவதாக அவர் கூறினார்.
Advertisement
Advertisement
சமீபத்திய நடவடிக்கையுடன், சத்தீஸ்கரில் இந்தாண்டு இதுவரை 227 நக்சலைட்டுகள் என்கவுண்டர்களில் கொல்லப்பட்டுள்ளனர், அவர்களில் பெரும்பாலோர் பஸ்தர் பிரிவில் உள்ளனர்.
A Naxalite was killed in an encounter with security forces in Chhattisgarh's Bijapur district on Wednesday, a senior police official said.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.