சந்திரசேகர் பவன்குலே  
இந்தியா

ராகுலின் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை, குழந்தைத்தனமானவை: அமைச்சர்

ராகுலின் குற்றச்சாட்டுகள் பற்றி மகாராஷ்டிர அமைச்சர் பவன்குலே கடுமையாக விமர்சனம்..

தினமணி செய்திச் சேவை

ராகுலின் வாக்குத் திருட்டு குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை, குழந்தைத்தனமானது என்று மகாராஷ்டிரம் அமைச்சர் சந்திரசேகர் பவன்குலே கூறினார்.

ஜல்னா ஆட்சியர் அலுவலகத்தில் செய்தியாளர் கூட்டத்தில் உரையாற்றிய பவன்குலே,

தேர்தலுக்கு முன்னதாக வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டபோது காங்கிரஸ் தொழிலாளர்கள் ஏன் ஆட்சேபனைகளை எழுப்பவில்லை, இந்த முறை மகாராஷ்டிரத்தில் வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலுக்கு முன்பு அவ்வாறு செய்யுமாறு வலியுறுத்தினர்.

ஏழைகளின் வாக்குரிமையைப் பறிக்கு நோக்கத்துடன் வாக்குத் திருட்டை நடத்தத் தேர்தல் ஆணையம் பாஜகவுடன் வெளிப்படையாகக் கூட்டுச் சேர்ந்துள்ளது என்ற தனது குற்றச்சாட்டுகளால் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி சர்ச்சையைத் தூண்டியுள்ளார்.

மக்களவை தேர்தலில் காங்கிரஸ் அதிக இடங்களை வெல்லும்போது, அவர்கள் கொண்டாடுகிறார்கள். ஆனால் மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் அவர்ள் தோல்வியடையும்போது புகார் கூறுகிறார்கள். காந்தியின் குற்றச்சாட்டுகள் குழந்தைத்தனமானவை மற்றும் ஆதாரமற்றவை.

ராகுலின் வாக்குத் திருட்டு குற்றச்சாட்டுகள் மகாராஷ்டிர வாக்காளர்களை அவமதிப்பதாகும். வரவிருக்கும் பிகார் மற்றும் மகாராஷ்டிரத்தின் உள்ளாட்சித் தேர்தல்களில், காங்கிரஸ் அழிக்கப்படும்" என்று அமைச்சர் கூறினார்.

Maharashtra Minister Chandrashekhar Bawankule termed Congress leader Rahul Gandhi's allegations about vote theft "baseless and childish", and said he had insulted voters in the state with his claims.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 2 காசுகள் உயர்ந்து ரூ.90.16ஆக நிறைவு!

விஜய்யிடம் சிபிஐ விசாரணை நிறைவு!

ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணமா? இந்த எண்களில் புகார் அளியுங்கள்!

ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணமா? - புகார் எண்கள் அறிவிப்பு!

டிகாப்ரியோ திரைப்படத்துக்கு கோல்டன் குளோப் விருது!

SCROLL FOR NEXT