டெஸ்லா (கோப்புப் படம்) 
இந்தியா

இரண்டு நாள்களில் தில்லியிலும் டெஸ்லா! இந்தியாவில் 2வது விற்பனையகம்!

எலான் மஸ்க்கின் டெஸ்லா கார் நிறுவனம் இந்தியாவில் அதன் இரண்டாவது விற்பனையகத்தைத் திறப்பது குறித்து...

இணையதளச் செய்திப் பிரிவு

இந்தியாவில், அமெரிக்க தொழில் அதிபர் எலான் மஸ்க்கின் மின்சார வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் இரண்டாவது விற்பனையகம் வரும் ஆக.11 ஆம் தேதி தில்லியில் திறக்கப்படுகின்றது.

மின்சார வாகன உற்பத்தியில் முன்னிலை வகித்து வரும், டெஸ்லா நிறுவனம், இந்தியாவில் அதன் முதல் விற்பனையகக் கிளையை, கடந்த ஜூலை மாதம் மும்பையில் திறந்தது. இதனை, மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் திறந்து வைத்தார்.

இந்நிலையில், டெஸ்லா நிறுவனத்தின் இரண்டாவது விற்பனையகம் தேசிய தலைநகர் தில்லியில், ஏரோ சிட்டி பகுதியில் வரும் ஆக.11 ஆம் தேதி திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் டெஸ்லா நிறுவனம் கால்பதித்து அதன் முதல் விற்பனையகம் திறக்கப்பட்ட ஒரு மாதத்திற்குள்ளாகவே அதன் இரண்டாவது கிளை திறக்கப்படுவது, வாடிக்கையாளர்களின் கவனத்தைப் பெற்றுள்ளது.

முன்னதாக, மும்பை, புணே, தில்லி மற்றும் குருகிராமம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த வாடிக்கையாளர்களுக்கு முன்னுரிமை வழங்கும் டெஸ்லா நிறுவனம், அவர்கள் வாங்கும் கார்களை வாடிக்கையாளர்களின் வீட்டிற்கே டெலிவரி செய்வதாகக் கூறப்படுகிறது.

மேலும், அந்த வாகனங்களை இந்தியாவின் அனைத்து மாநிலங்களில் இருந்தும் பதிவு செய்துக்கொள்வதற்கான வசதியை தற்போது டெஸ்லா நிறுவனம் மேம்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: தில்லியில் கனமழை: 100-க்கும் அதிகமான விமானங்கள் தாமதம்!

In India, the second showroom of American businessman Elon Musk's electric vehicle manufacturing company Tesla will open in Delhi on August 11.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

'தமிழ்நாடு மீனவர்கள் சிறைவாசத்தின் அச்சத்திலேயே வாழ்ந்து வருகின்றனர்'

குஜராத்தில் எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பு: 5 ஆண்டுகளில் 15,000 புகார்கள்!

வீட்டுக்குப் போனதும் நான் கால்ல விழுகணும்! வைரலாகும் அஜித் - ஷாலினி!

பாகிஸ்தானின் ஒரு விமானம்கூட சுட்டு வீழ்த்தப்படவில்லை! ஆபரேஷன் சிந்தூருக்குப்பின் இந்தியா - பாக். இடையே சொற்போர்!

கே.ஏ. குணசேகரன் - நூல் அறிமுகம் | விமர்சனம்

SCROLL FOR NEXT