இந்தியா

மற்ற நாடுகளைப்போல நாமும் துன்புறுத்தக் கூடாது: நிதின் கட்கரி

பொருளாதார செல்வாக்கு பெற்ற நாடுகள், மற்ற நாடுகளை துன்புறுத்துவதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார்.

இணையதளச் செய்திப் பிரிவு

பொருளாதார செல்வாக்கு பெற்ற நாடுகள், மற்ற நாடுகளை துன்புறுத்துவதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார்.

மகாராஷ்டிரத்தில் நாக்பூர் மாவட்டத்தில் தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தில் (VNIT) மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கலந்துகொண்டு பேசினார்.

நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், மற்ற நாடுகளை துன்புறுத்தும் நாடுகளில் பொருளாதார ரீதியாக செல்வாக்கு இருப்பதாலும், சிறந்த தொழில்நுட்பங்கள் இருப்பதாலும்தான் அவர்களால் அவ்வாறு செய்ய முடிகிறது.

இந்தியா தனது ஏற்றுமதியை அதிகரித்து, இறக்குமதியைக் குறைக்க வேண்டும். இந்தியா சிறந்த தொழில்நுட்பம் மற்றும் வளங்களைப் பெற்றால், யாரையும் துன்புறுத்தாது.

ஏனெனில், உலகின் நலனே முக்கியமானது என நமது கலாசாரம் கற்பிக்கிறது என்று தெரிவித்தார்.

இந்தியா மீது அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் 50 சதவிகித வரி விதிப்பதை சுட்டிக்காட்டி, நிதின் கட்கரி பேசியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கனவு தேவதையே... அஞ்சனா ரங்கன்!

பாஜகவை எதிரி என்று சொல்லும் விஜய், எப்படி அதன்பிடியில் இருப்பார்? நயினார் நாகேந்திரன்

இந்தியாவுக்கு வருவதில் கௌரவம்: மெஸ்ஸி

குஜராத் எல்லையில் பாகிஸ்தான் ராணுவ கட்டமைப்பு அதிகரிப்பு! ராஜ்நாத் சிங் எச்சரிக்கை

வாட்ஸ்ஆப் vs அரட்டை! அதீத வரவேற்பைப் பெறுகிறது! முதலிடம்!!

SCROLL FOR NEXT