PTI
இந்தியா

கர்நாடகத்தில் ஜிஎஸ்டி முறைகேடு: ரூ.39,577 கோடி வரி ஏய்ப்பு!

கர்நாடகத்தில் சரக்கு மற்றும் சேவை வரி ஏய்ப்பு 5 மடங்கு அதிகரிப்பு...

இணையதளச் செய்திப் பிரிவு

கர்நாடகத்தில் சரக்கு மற்றும் சேவை வரி(ஜிஎஸ்டி) ஏய்ப்பு செய்யப்படுவது 5 மடங்கு அதிகரித்துள்ளதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.

கர்நாடகத்தில் 2024-25 நிதியாண்டில், ரூ. 39,577 கோடி சரக்கு மற்றும் சேவை வரி ஏய்ப்பு செய்யப்பட்டுள்ளதை மத்திய ஜிஎஸ்டி அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். வரி ஏய்ப்பு புகார்கள் தொடர்பாக மொத்தம் 1,254 வழக்குகள் பதியப்பட்டுள்ளன.

2024-ஆம் நிதியாண்டுடன் ஒப்பிடுகையில் 2025-ஆம் நிதியாண்டில் வரி ஏய்ப்பு 5 மடங்குக்கும் மேல் அதிகம். 2023-24 நிதியாண்டில் ரூ. 7,202 கோடி வரி ஏய்ப்பு நடந்துள்ளது. மொத்தம் 925 வழக்குகள் பதிவாகியுள்ளன.

2022-23 நிதியாண்டில் ரூ. 25,839 கோடி வரி ஏய்ப்பு செய்யப்பட்டுள்ளது.

இந்த தகவல்களை மக்களவையில் எழுப்பப்பட்டதொரு கேள்விக்கு அளித்துள்ள எழுத்துப்பூர்வமான பதிலில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

Central GST officers in Karnataka detected tax evasion of ₹39,577 crore in 2024-25 fiscal year

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குளச்சல் மீன்பிடி துறைமுகத்தில் 2 படகுகள் தீயில் எரிந்து சேதம்

ரூ.200 கோடியில் பள்ளிப் பாதுகாப்பு வழித்தடங்கள்: நிதிநிலை அறிக்கையில் மேயர் பிரியா அறிவிப்பு

நிகோடின் பொட்டலங்களை விற்றால் நடவடிக்கை: மருந்து கட்டுப்பாட்டு இயக்ககம்

மத்தியில் கூட்டணியில் இருந்தபோது மாநில சுயாட்சி ஸ்டாலினுக்கு தெரியவில்லையா? தமிழிசை கேள்வி

வாசுதேவநல்லூா் அருகே யானைகள் அட்டகாசம்: தென்னை மரங்கள் சேதம்

SCROLL FOR NEXT